search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online cricket suicide"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆன்லைனில் எவ்வளவு பணம் இழந்து உள்ளார் என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரகாஷ் (32). இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் வழங்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கும் பெண்கள் சரிவர கடனை கட்டாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் நிதி நிறுவனத்தில் பணம் கட்டாததால் பிரகாஷின் சம்பள பணத்தை பிடித்தம் செய்துள்ளனர். இதனால் குடும்ப செலவிற்கு அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    கடனை அடைப்பதற்காக ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்து விடலாம் என எண்ணி இருக்கும் பணத்தையும் மீண்டும் கடன் வாங்கியும் ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அதிலும் தோல்வி ஏற்பட்டு மேலும் கடனாளியாக ஆனார்.

    இந்த நிலையில் தனது நண்பர் ஒருவருக்கு கடன் அதிகமானதால் கடன் காரர்களில் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது இதனால் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் விஷம் அருந்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் தான் இருக்கும் இடத்தையும் லொகேஷன் மூலமாக அனுப்பியும் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷின் நண்பர்கள் அவர் இருக்கும் இடத்தை தேடி சென்று பார்த்தனர். அங்கு அவர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியின் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

    பின்னர் இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே அவர் எவ்வளவு கடன் வாங்கி உள்ளார்? ஆன்லைனில் எவ்வளவு பணம் இழந்து உள்ளார் ?என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்தனர்.

    ×