search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PRIMAY SCHOOL TEACHERS"

    • ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை:

    தேசத்தின் எதிர்காலக் கல்வியைச் சீரழிக்கும் தேசியக் கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை திரும்பத் தர வேண்டும், ஊக்க ஊதியம், சரண்டர், டிஏ போன்ற பறிக்கப்பட்ட சலுகைகளை உடன் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் இஎம்ஐஎஸ் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ராமகிருஷ்ணன் துவக்கவுரையற்றினார். மாவட்ட துணைச் செயலாளர்அழகு, கல்வி மாவட்ட செயலாளர் புவியரசு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிர்வாகிகள் மணிக்குமார், தேவகுமார், மகாலிங்கம், மீனாட்சி , காத்தாயி, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×