search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayath office"

    • அலுவலர் ஒருவர் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருந்ததை பார்த்துள்ளார்.
    • சாரை பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு படையினர் பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் கரூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அருகிலேயே வேளாண்மை துறை அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நில வருவாய் அலுவலர் அலுவலகம், சட்டமன்றத் தொகுதி அலுவலகம்,பயணியர் விடுதி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளன.

    நேற்று காலை 10 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் அருகே 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று இருந்தது. அந்த வழியாக சென்ற அலுவலர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    ×