search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passengers gather"

    • தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட எதுவாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
    • முன்பதிவு பெட்டி கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்க ஏறினர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட எதுவாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட ஆயிரக்கண க்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதைப்போல் வெளி மாவட்டத்தில் தங்கி இருந்த ஈரோடு மாவட்ட மக்களும் தீபாவளி கொண்டாடு வதற்காக ஈரோட்டுக்கு வந்தனர்.

    இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ப்பட்டன. மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் கல்லூரி கள் திறக்கப்படுகின்றன. இதேபோல் அரசு| தனியார் அலுவலகங்களும் நாளை முதல் வழக்கம் போல் செயல்பட தொடங்குகிறது.

    இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் இன்று முதல் மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வருகின்றனர். இதே போல் ஈரோட்டில் இருந்து வெளி யூருக்கு செல்பவர்களும் இன்று திரும்பி சென்றனர்.

    இதன் காரணமாக இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. முன்பதிவு பெட்டி கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்க ஏறினர்.

    ×