search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavitra Gowda"

    • நாளைக்குள் அவருக்கு டி.வி. வழங்கப்படும் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • சொகுசு வசதி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

    பெங்களூரு:

    ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு முதலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சொகுசு வசதி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், நடிகர் தர்ஷன் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் தர்ஷன் தனது அறைக்கு டி.வி. கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார். தனது வழக்கு தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும், வெளி உலகில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் டி.வி. கேட்பதாக தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து சிறை வழிகாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு டி.வி. வழங்க சிறை துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே நாளைக்குள் அவருக்கு டி.வி. வழங்கப்படும் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சித்திரதுர்காவை சேர்ந்த தர்சனின் ரசிகர் ரேணுகாசாமி பவித்திரா கௌடாவுக்கு தகாத முறையில் மெசேஜ் செய்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • ரேணுகாசமியை சித்திரதுர்காவில் உள்ள தனது ரசிகர் மன்றத் தலைவர் ராகவேந்திரா மூலம் பெங்களூருக்கு அழைத்து வரச் செய்துள்ளார் தர்ஷன்

    கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வெறு சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. நடிகர் தர்சனும் அவரது தோழி ரேணுகா கௌடாவும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர் என்றும் சித்திரதுர்காவை சேர்ந்த தர்சனின் ரசிகர் ரேணுகாசாமி பவித்திரா கௌடாவுக்கு தகாத முறையில் மெசேஜ் செய்து வந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் 10,000 ரூபாய் தருவதாகவும் தன்னுடன்லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வரும்படியும் பவித்ரா கௌடாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ரேணுகாச்சாமி மெசேஜ்களை அனுப்பியுள்ளது அவர்களின் செல்போன்களை ஆராய்ந்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் பவித்திரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி உடலுறவுக்கு ரேணுகாச்சாமி வற்புறுத்தி வந்ததே இந்த கொலைக்கு மூல காரணம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேணுகாசமியை சித்திராதுர்காவில் உள்ள தனது ரசிகர் மன்றத் தலைவர் ராகவேந்திரா மூலம் பெங்களூருக்கு அழைத்து வரச் செய்து தர்ஷன் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரேணுகா சாமியின் உடல் மொத்தம் 39 இடங்களில் காயங்கள் இருந்துள்ளது.

    ரேணுகா சாமியின் நெஞ்சு எலும்புகள் உடைக்கப்பட்டு ஆணுறுப்பு மின்சாரம் பாய்ச்சி மிதித்து சிதைக்கப்பட்டுள்ளது. ரேணுகா சாமியின் ரத்தத் துளிகள் பவித்ரா கவுடாவின் மற்றும் தர்ஷனின் காலனிகளில் கிடைத்துள்ளதாக குற்றபத்திர்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்ஷன் அடிக்கப்பட்டுள்ள புதிய சிறையில் அவரது கோரிக்கையின்பேரில் 32 இன்ச் டிவி ஆமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளியுலகில் நடப்பதை தெரிந்து கொள்வதற்காக தர்ஷன் சிறை அதிகரிகளிடம் டி வி கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

    ×