search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar nagar"

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு ரோடு, சேரன் நகா், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

    புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம்.

    • பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • அடிக்கடி வடமாநில வாலிபர்கள் மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக புகார்.

    பல்லடம் :

    பல்லடம்- மாணிக்காபு–ரம் ரோட்டில் அமைந்துள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சில திருநங்கைகள் அங்கு உள்ள ஒரு வீட்டில் குடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தப் பகுதியில் அடிக்கடி வடமாநில வாலிபர்கள், மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக இப்பகுதி பொதுமக்கள் பலமுறை போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இந்தப் பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×