search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Physically challenged people"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்க வேண்டும்: கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.
    • அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைத்து துறைகளின் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாற்றுத்தி றனாளிகளுக்கை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அறிவறுத்தினார். அதன்படி அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்திடும் வகையில் வட்டார அளவில் முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி அட்டை வழங்கி, பணி வழங்குதல், வருவாய்த்துறை வாயிலாக உதவித்தொகை வழங்குதல் மற்றும் இதர சான்றுகள் வழங்குதல், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொழிற்கடனுதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு சேர்த்திடவும், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவிஇயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×