search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "premium"

    • family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆக உயர்வு.
    • தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்வு.

    வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைத்தளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் யூடியூப் தனது பிரீமியம் சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், மாணவர் மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.79ல் இருந்து ரூ.89 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    தனிநபருக்கான ப்ரீபெய்ட் மாதாந்திர கட்டணம் ரூ.139ல் இருந்து ரூ.159 ஆகவும், தனிநபருக்கான ப்ரீபெய்ட் காலாண்டு (3 மாதம்) கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.459 ஆகவும், தனிநபருக்கான ஆண்டு கட்டணம் ரூ.1290ல் இருந்து ரூ.1490 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    • பயிர் காப்பீடு கட்டிய அனைவருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு கிடைக்க கலெக்டரிடம் பேசி முயற்சி செய்கிறோம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஐ, தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஎம் இணைந்து, பயிர் காப்பீடு கட்டிய அனை வருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தினுடைய சமாதான கூட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தன கோபாலகிருஷ்ணன் தலைமை நடைபெற்றது.

    இந்த சமாதான கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயசீலன் வட்டார புள்ளியல் துறை அலுவலர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன், (சி பி ஐ) தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் (சி பி எம்) இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன ராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கலியபெருமாள், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் பயிர் காப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி முயற்சி செய்கிறோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமாதான கூட்டம் நிறைவுற்றது.

    ×