என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prisoner escapes"
- பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
- சிகிச்சை பெரும் அறையின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித் தொழிலாளி.
கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ராஜா சிகிச்சை பெரும் அறையின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் தப்பி ஓடிவிட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜாவை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடினார்.
- மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி மகன் அஜித் குமார் (வயது24).
இவர் கடந்த 5-ந் தேதி நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சிறு காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.
காயம் காரணமாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டிருந்தார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
நேற்று இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி அஜித்குமார் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்