என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Priya Mani
நீங்கள் தேடியது "Priya Mani"
தென்னிந்திய நடிகையாக வலம் வரும் பிரியாமணி தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பருத்திவீரன் படம் மூலம் பல விருதுகளை அள்ளிக்குவித்த நடிகை பிரியாமணி, தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தெலுங்கில் இரண்டு படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருகிறார்.
கணவருடன் பிரியாமணி
இதற்கிடையில் பிரியாமணி தனது கணவர் முஸ்தப்பா ராஜூவை பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தீபாவளி தினத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரியாமணி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அந்த எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன் என்று நடிகை பிரியாமணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Priyamani #MeToo
பருத்தி வீரன் உள்பட பல படங்களில் நடித்தவர் பிரியாமணி. இவரிடம் சமீபத்தில் அதிகரித்து வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் பற்றி கேட்டபோது, மீ டூ விஷயத்தில் பெண்கள் தங்களுக்கான நியாயத்துக்காக போராடுகின்றனர்.
எதுவும் நடக்காமலே நடந்ததாக எந்தப் பெண்ணும் சொல்ல மாட்டாள். அதற்கான அவசியமும் இல்லை. சினிமாத் துறையில் இருக்கும் பெண்கள் பேசுவதால், சினிமாவில் மட்டுமே இதெல்லாம் நடப்பதாக அர்த்தமில்லை. பெண்களுக்கு இந்தச் சமுதாயத்தில் பாதுகாப்பு குறைவுதான்.
இதைச் சொல்வதற்கு அசிங்கமாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தச் சூழலுக்குள்ளே பெண் குழந்தைகளை வளர்ப்பதுதான் இன்றைய பெற்றோருக்கான சவால். நான் சினிமாவில் கிளாமராக வருகிறேன் என்றால், அது என் தொழில். அதற்காக நிஜத்திலும் அப்படியே இருப்பேன் என்ற எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அசிங்கப்படுத்த யோசிக்க மாட்டேன். எனக்குப் பாலியல் தொல்லை ஏற்பட்டால், நிச்சயம் என் கணவரின் உதவியுடன் எல்லோர் முன்னிலையிலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என கூறியிருக்கிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X