search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry fever"

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக்ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், வி.பி.சிங். நகர், காந்தி வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது46). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் சுபிக்ஷா (வயது13). அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக்ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை கொடுத்தனர்.

    ஆனாலும் மறுநாள் காலை காய்ச்சல் அதிகரித்ததால் சுபிக்ஷா பள்ளிக்கு செல்லவில்லை. அன்று மதியம் 3 மணி முதல் தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தார், மாலையில் அங்குள்ள தனியார் கிளினிக் டாக்டரிடம் சுபிக்ஷாவை காண்பித்தனர்.

    அங்கிருந்த டாக்டர் கதிர்காமம் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தார். அதன்படி இரவு 10 மணிக்கு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர். சிறுமிக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால் ரத்த அழுத்தம் சீராக வில்லை.

    மேலும் இ.சி.ஜி.யும் சீராக இல்லாததால் நள்ளிரவு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சுபிக்ஷா, பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×