search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puja Festival"

      புதுச்சேரி:

      புதுவை வில்லியனூர் அடுத்த கோர்க்காட்டில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை விமர்சையாக நடந்தது.18 சித்தர்களில் 16 வது இடத்தில் இருப்பவர் கோரக்கர் சித்தர். மச்சேந்தி ரர் அருளியதால் அடுப்பு சாம்பலில் இருந்து கோரக்கர் சித்தர் அவதரித்தார். கோரக்கர் சித்தருக்கு

      பொய்கைமலை, ஆனை மலை, நாகப்பட்டினம் அடுத்த வடக்கு பொய்கை நல்லூர், தென்னார்க்காடு, சதுரகிரி, கர்நாடகா, கோரக்பூர் ஆகிய இடங்களில் இவருக்கு ஜீவ சமாதிகள் உள்ளது. வில்லியனூர் அருகே உள்ள கோரக்கர் காடு என்னும் கோர்க்காடு பெருமாள் கார்டன் பகுதி யில் கடும் தவம் புரிந்து வாழ்ந்து வந்ததால் கோர்க்காட்டிலும் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. கடந்த மூன்றாம் தேதி கோரக்க சித்தரின் குருபூஜை தினத்தை ஒட்டி கோர்க்காட்டில் உள்ள கோரக்கர் சித்தர் பீடத்தில் காலையில் தொடங்கி சிறப்பு ஆராதனைகள், நெய்வேத்தியங்கள் நடத்தப்பட்டது.

      பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோரக்கர் சித்தர் குருபூஜை நிகழ்ச்சியில் புதுவை மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. குருபூஜை விழா ஏற்பாட்டினை

      கோரக்கர் சித்தர் பீட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, சுரேஷ், தனபால், சரண்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

      • முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டியம் மாணவர்களின் சலங்கை பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
      • நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

      புதுச்சேரி:

      முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சுந்தர நாட்டிய கேந்திர பரதநாட்டியம் மாணவர்களின் சலங்கை பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

      நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

      சிறப்பு விருந்தினர்களாக பாரதியார் பல்கலைக் கூட நடன துறையின் தலைவர் முனைவர் லூர்தஸ் சாந்தி மற்றும் பாரதியார் பல்கலைக்கூட நடனத்துறை யின் உதவிப் பேராசிரியர் விசித்ரா பலிக்காண்டி மற்றும் பாரதியார் பல்கலைக் கூட நடனத்துறை யின் உதவிப் பேராசிரியர் சண்முகசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு பரதநாட்டிய மாணவர்களின் சலங்கை பூஜை கலை நிகழ்ச்சியை கண்டுகளித்து மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

      புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். பாடகர் வேல்முருகன், மிருதங்கம் வசந்த ராஜா, வயலின் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுந்தர நாட்டிய கேந்திரா குரு சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

      சலங்கை பூஜை விழாவில் சுமார் 400-க்கு மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

      • பாலய சுவாமிகளின் 12-ம் ஆண்டு குருபூஜை மற்றும் மலர் வெளியீட்டு விழா நடந்தது.
      • பெண்கள் கலை அறிவியல் கல்லூரி செயலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

      புதுச்சேரி:

      மயிலம் பொம்மபுர ஆதீனம் 19-ம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞான பாலய சுவாமிகளின் 12-ம் ஆண்டு குருபூஜை மற்றும் மலர் வெளியீட்டு விழா நடந்தது.

      பொம்மையார்பாளையம் மயிலம் பொம்மபுர ஆதின மட வளாகத்தில் நடந்த விழாவில் ராஜேஸ்வரி பெண்கள் கலை அறிவியல் கல்லூரி செயலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

      விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீன 20-ம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி மலரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் குமாரதேவர் சுவாமி திருமடம் 24-வது வீர சிங்காசன குருமகா சன்னிதானம் தவத்திரு ரத்தின வேலாயுத சிவப்பி ரகாசம், திருப்பாதிரிப்பு லியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலய 9-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக ஆறுமுகம் மெய்ஞான சிவாச்சாரியார், தென்சேரிமலை ஆதீனம் நந்தவனத் திருமடம் சீர்வளர்சீர் முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

      நிகழ்ச்சியில் டெல்லி தமிழ் சங்கத் தலைவர் பெருமாள், பொதுச்செயலாளர் முகுந்தன், புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி லட்சுமணன் ஆகியோர் மலரை பெற்று சிறப்புரையாற்றினர்.

      புதுவை தமிழ்ச் சங்க ஆட்சி குழுவில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் முத்து, துணைத்தலைவர்கள் ஆதிக்கேசவன், திருநாவுக்கரசு, செயலாளர் மோகன்தாசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலாளர் தினகரன், ஆட்சி குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சுரேஷ்குமார், சிவேந்திரன் ஆனந்தராசன் மற்றும் புதுவை அரசின் கலைமாமணி விருது பெற்ற வர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.

      இதே போல் புதிதாக பொறுப்பேற்ற சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பூபதி பெரியசாமி, ஆலோசனைக் குழு உறுப்பினர் அரங்க முருகையன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் மயிலம் ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி செயலர் விஸ்வநாதன் நன்றி கூறினார். பள்ளி முதல்வர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியை ெதாகுத்து வழங்கினார்.

      ×