search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pushpak"

    • கர்நாடகாவின் சித்ரதுர்கா ஏவுதளத்தில் நடைபெற்ற புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றது.
    • புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டியது.

    பெங்களூரு:

    விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் ஆர்.எல்.வி. புஷ்பக் என்ற ஏவுகலனை இஸ்ரோ ஏற்கனவே 2 முறை சோதனை செய்திருந்தது.

    இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏவுதளத்தில் இன்று காலை 7.10 மணிக்கு 3-வது முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.

    புஷ்பக் என பெயரிடப்பட்ட இறக்கைகள் கொண்ட ஆர்.எல்.வி. வாகனம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.

    இதன்மூலம் செயற்கைக்கோள்களையோ அல்லது விண்கலன்களையோ விண்ணுக்கு சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ஏவுகலன் திட்ட பரிசோதனையை வெற்றிகரமாக செய்துகாட்டி உள்ளோம் என இஸ்ரோ தெரிவித்தது.

    எதிர்காலத்தில் இதுபோன்ற பல வெற்றிகரமான மைல்கற்களை அடைய வாழ்த்துக்கள் என இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது.

    • இன்று காலை 7.10 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
    • ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் சித்தர்துங்காவில் இருக்க கூடிய ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேன்ஜில் இன்று காலை 7.10 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

    இதன் மூலம் செயற்கை கோளையோ, விண்கலங்களையோ சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு வரும் ஏவுகணையை இஸ்ரோ பரிசோதனை செய்யகூடிய வகையில் இந்த திட்டம் என்பது மேற்கொள்ளப்பட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    'புஷ்பக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது விமானப்படையுடைய ஃபிலிப் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற சோதனை வெற்றி பெற்ற நிலையில், இன்று 3வதாக நடைபெற்ற சோனையில் இந்த ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் மீண்டும் பயன்படுத்த கூடிய ஏவுகணையை தயாரித்து வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டது.
    • ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.

    இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான புஷ்பக் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிகல் சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் இஸ்ரோவால் ராக்கெட் ஏவப்பட்டது.

    இது ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.

    இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பெட்டி அளவுருக்களை அடைந்த பின்னர் விடுவிக்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    ×