என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Railway Overpasst"
- ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
- விரைந்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
நாகப்பட்டினம்:
நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ரெயில்வே மேம்பால பணி ஆய்வு செய்து கூறியதாவது:-
நாகப்பட்டினம் - அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்படாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் சட்டமன்றத்தில் நான் இது குறித்து பேசினேன்.
அப்போது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விரைவில் பணி தொடங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார். அதன்படி ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
விரைந்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொ றியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்