search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainwater Project"

    • ராமநாதபுரத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முடங்கி போனது.
    • கடந்த 10 ஆண்டுகளாக தொடர் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் செயல்ப டுத்தப்பட்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டம் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் காணாமல் போய்விட்டது. வருங்காலங்களில் வறட்சியை சமாளிக்க மீண்டும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிராமங்களில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது,

    இயற்கை கொடுக்கும் மழைநீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதி களை, திட்டமிட்டுச் செயல்ப டுத்த அரசு அறிவித்தும் அதிகாரிகள் முன் வராத காரணங்களால் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் வறட்சி நிலவுகிறது. இதனால் மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் ஆதாரங்களும் சரிவர அமையாததால், குடிநீருக்காக மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

    நாளடைவில் அதிகாரி கள் மழைநீர் சேகரிப்பு திட்டங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால், குழாய்கள், தொட்டிகள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால், மழைநீரைச் சேமிக்க முடியாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    எனவே, கிராமங்கள் தோறும் மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும், மழைக் காலம் தொடங்கும் முன் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×