search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Risk of Burns"

    • நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை.
    • ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக காவிரி நீர் சென்றடையவில்லை.

    இந்நிலையில் காவிரி நீரை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள சித்தாய்மூர் ஊராட்சி கீரம்பேர் பாசன வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்கு இதுவரை காவிரி நீர் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.

    வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து வாசன வசதி பெறும் இக் கால்வாய் தூர்வாரி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது.

    இதனால் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் தேங்கியும், தேவையற்ற செடிகள் வளர்ந்தும் நீர் பாய்வதற்கு ஒரு தடையாகவே இருந்து வருகிறது.

    இதனால் இப்பாசனத்தை நம்பி சுமார் 1000 ஏக்கருக்கும் வயலில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விதை நெல்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது.

    இதனால் ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

    பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் விவசாயிகளே சொந்தமாக வாய்க்காலை தூர்வாரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சுமார் 7கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்காலை விவசாயிகளே தங்களது நிதி பங்களிப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×