search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russian War"

    • போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கார்கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2½ ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர்.

    அந்த கட்டிடத்தின் 9 மற்றும் 12 வது தளங்களுக்கு இடையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் ராணுவ விமான தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவை அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
    • ரெஸ்னிகோவ் நீக்கப்படும் முடிவு அந்த நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உக்ரைன்:

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவை அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். அவருக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்குமாறு அவர் அறிவித்து உள்ளார்.

    நாட்டு மக்களுக்கான காணொளி செய்தியில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள அதிபர் ஜெலென்ஸ்கி, பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவுக்குப் பதிலாக ருஸ்டெம் உமெ ரோவை நியமிக்க இந்த வாரம் நாடாளுமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த 550 நாட்களுக்கும் மேலாக ரஷ்யாவுக்கு எதிரான போரை முழுமையாக முன்னெடுத்தவர் ரெஸ்னிகோவ் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே உக்ரைன் பாதுகாப்பு மந்திரியாக ரெஸ்னிகோவ் செயல்பட்டு வருகிறார். ரஷியாவுக்கு எதிரான போரின்போது மேற்கத்திய ராணுவ உதவியைப் பெற ரெஸ்னிகோவ் நடவடிக்கை மேற்கொண்டார்.

    ரஷ்யா உக்ரைன் மீது தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொள்ளும் முக்கியமான நடவடிக்கை இது என கூறப்படுகிறது.

    ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. போர் காலத்தில் ஊழல் முறை கேடுகளுக்கு இடமில்லை என அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்த நிலையில், ரெஸ்னிகோவ் நீக்கப்படும் முடிவு அந்த நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×