search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of"

    • மண்பானை செய்யும் தொழிலாளர்களிடம் பொங்கல் பானைகள் மற்றும் மாடுகளின் உருவ பொம்மைகளை வாங்கி சென்றார்கள்.
    • கரும்பு விற்பனையும், சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் அந்தியூர் பகுதியில் இப்போதே பொங்கல் பண்டிகை களைக்கட்ட தொடங்கி உள்ளது.

    அந்தியூர்:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஈரோடு மாவட்ட த்தில் பொங்கல் வைக்க ேதவையான பானை மற்றும் மாடுகளுக்கு தேவையான வண்ண பொடிகள், வண்ண கயிறுகள் விற்பனை அதி கரித்து வருகிறது.

    மேலும் கிராம பகுதி களில் சந்தை மற்றும் கடை வீதிகளில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் விற்பனை அதி களவில் நடந்து வருகிறது.

    இதே போல் அந்தியூர் பகுதிக்கு சுற்று வட்டார பகுதிகளான தவிட்டு ப்பாளையம், வெள்ளை யம்பாளையம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், காட்டூர், பச்சாபாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம், மூல க்கடை, செல்லம் பாளையம், புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து பானை மற்றும் மளிகை பொருட்களை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் பொங்கல் வைப்பதற்கு தேவையான மண் பானைகள், கரும்பு களை ஆர்வமுடன் வாங்குகிறார்கள். இதனால் அந்தியூர் பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இதே போல் மாட்டுப் பொங்கல் அன்று விவ சாயிகள் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கொம்புகளுக்கு வண்ண கயிறுகளை கட்டி மாடுகளுக்கு பூஜை செய்வார்கள்.

    மேலும் அந்தியூர் பகுதியில் மாடுகள் எந்தவித நோய்களும் தாக்காமல் இருக்க மாடுகள் போன்று மண்ணினால் செய்யப்பட்ட உருவ பொம்மைகளை வாங்கியும் தங்கள் குல தெய்வங்கள் முன் வைத்து பூஜை செய்து மாடுகளுக்கு, படைத்த உணவுகளை கொடுப்பது வழக்கம்.

    இதனால் அந்தியூர் பாலம் அருகே மண்பானை செய்யும் தொழிலாளர்களிடம் பொங்கல் பானைகள் மற்றும் மாடுகளின் உருவ பொம்மைகளை வாங்கி சென்றார்கள்.

    இந்த பானைகள் ரூ.100 முதல் ரூ.200 வரையிலும் மாடுகள்உருவ பொம்மைகள் சிறியது 100 ரூபாய் முதல் பெரியது 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கரும்பு விற்பனையும், சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் அந்தியூர் பகுதியில் இப்போதே பொங்கல் பண்டிகை களைக்கட்ட தொடங்கி உள்ளது.

    ×