என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sapling camp"
- பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன.
- திட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர்.
ஊட்டி
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குன்னூர் அருகே உள்ள தேனலை கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் மத்தியில் சமூக சேவையை வலியுறுத்தும் வகையில் இம்முகாமில் ஒவ்வொரு நாளும் தூய்மைப்பணிகள், கிராம மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நட்டு அதை வளர்த்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வரலாற்று தகவல்களை எடுத்துரைத்து பல்வேறு சாதனை விருதுகளைப் பெற்று வரும் மாணவன் செல்வன் கிரினித் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர்களர்கள், முனைவர் கருப்பாயி, முனைவர் பேமலானி, முனைவர் ரோஸ் மற்றும் லீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரோஜாரமணி, ஆசிரியை பவித்ரா மற்றும் ஊர் பிரமுகர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் செல்வன் கிரினித்துக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்