search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathankulam robbery"

    சாத்தான்குளம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ஆல்வின் விமலா. இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் அமெரிக்காவிலும், இன்னொரு மகள் சென்னையிலும் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜெய ராஜும், அவரது மனைவியும் கடந்த 11-ந்தேதி சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று அவர்கள் ஊர் திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே பீரோவில் ½ பவுன் தங்க கம்மல், ரூ.2 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுபற்றி தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட் டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    ×