search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "secular janata dal"

    • ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால்
    • பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    முன்னாள் இந்தியப் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை உருவாக்கியவருமான தேவகௌடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.

    ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இடையிலேயே பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிக்கியதால் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகே இவை வெளிச்சத்துக்கு வந்தன. சமீபத்தில் பிரஜ்வல் நாடு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று கூடிய கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் எச்.டி.ரேவண்ணா இந்த விவகாரம் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். அங்கு அவர் பேசியதாவது,எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

    'கர்நாடக காவல்துறை தலைமை இயக்குனர் அலோக் மோகன் மீதும் ரேவண்ணா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு எதிராக சில பெண்களை இயக்குநகரகத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் அளிக்க வைத்து அலோக் மோகன் புகார் அளிக்க வைத்துள்ளார்.அவர் தலைமை இயக்குனராக இருப்பதற்கு தகுதியற்றவர்' என்று சட்டமன்றத்தில் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.  ரேவண்ணாவின் பேச்சுக்கு துணை முதலவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பலர் கடனைகளை தெரிவித்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவர் பின் ஒருவராக முன்வந்து புகார் அளித்து வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    கர்நாடகம் மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து குமாரசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். #SecularJanataDal #StatePresident #Kumaraswamy
    பெங்களூரு:

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக தேவே கவுடா செயல்பட்டு வருகிறார். கர்நாடகம் மாநில தலைவராக அவரது மகன் குமாரசாமி இருந்து வந்தார்.

    இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    இதையடுத்து, அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பதவியில் இருந்து குமாரசாமியை விடுவித்து தேவே கவுடா இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். குமாரசாமிக்கு பதிலாக, விஷ்வநாத் என்பவரை மாநில தலைவராக நியமனம் செய்துள்ளார்.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தேவே கவுடா சார்ந்திருக்கும் ஒக்காலிகா இனத்தவருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது அக்கட்சியின் மாநில தலைவர் பதவி குருபா இனத்தவரை சேர்ந்த விஷ்வநாத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    சித்தராமையாவின் நெருங்கிய நண்பரான விஷ்வநாத், கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SecularJanataDal #StatePresident #Kumaraswamy
    ×