search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selaiyur Robbery"

    சேலையூர் அருகே விவசாயிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    வேளச்சேரி:

    கோவிலஞ்சேரி அகரம் மெயின் ரோட்டைசேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவர் சேலையூரை அடுத்த ராஜ கீழபாக்கத்தில் உள்ள வங்கிக்கு இன்று வந்திருந்தார். அங்கு ரூ.2 லட்சத்தை எடுத்து ஒரு கைப்பையில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். ஹெல்மெட் அணிந்திருந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த 10 ரூபாய் நோட்டை கீழே சிதறி விட்டனர்.

    பின்னர் சீனிவாசனிடம், கீழே 10 ரூபாய் நோட்டுகள் கிடக்கிறது. அது உங்களுடையதா? என கேட்டனர். அதை எடுக்க அவர் கீழே குனிந்த போது கையில் வைத்திருந்த ‘பேக்’கையும், செல்போனையும் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    சேலையூர் அடுத்த மானம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பள்ளிக்கரணை:

    சேலையூரை அடுத்த மானம்பாக்கம் முதல் குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் நன்னப்பன், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். கடந்த 4-ந்தேதி அவர் வீட்டை பூட்டி விட்டு ஆவடியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று இரவு திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 32 பவுன் நகையை காணவில்லை.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×