search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhas"

    • மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம்.
    • காசிவிஸ்வநாதர் கோவிலில் மச்ச முனியின் ஜீவசமாதி உள்ளது.

    எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்த பூமியிது. அதில் ஒரு சித்தர்தான் மச்சமுனி. அவர் பாடல் இது;

    "செபித்திட காலம் செப்புவேன் மக்களே

    குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம்

    அவித்திடும் இரவி அனலும் மேலும்

    தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே''

    பொருள்:

    ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜெபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும்.

    ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையில் மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்ச முனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

    காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். ஆடி மாதம் ரோகிணியில் அவதரித்து, 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்த இந்த சித்தரின் குருபூஜை இன்று நடைபெறுகிறது.

    திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு சுனை உள்ளது. அங்கே பக்தர்கள் தயிரை வாங்கி சுனை நீரில் விடுகிறார்கள். அப்பொழுது மச்ச முனி சித்தர் மீன் வடிவில் வந்து அந்த தயிரை ஏற்றுக் கொண்டு நமக்கு நல்லருள் புரிகிறார் என்பது நம்பிக்கை.

    • முக்தி என்று சொன்னாலே ஈசனின் திருவடியை அடைவது தான்.
    • சிவபெருமானுக்கு உரிய தளங்களில் அக்னி தளமாகவும் உள்ளது.

    உலகம் தோன்றிய காலத்தில் இருந்து திருவண்ணாமலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெவ்வேறு யுகங்களில் இந்த மலை வெவ்வேறு விதமாக தோன்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    முதன்முதலாக கிருதா யுகத்தில் திருவண்ணாமலை அக்னி சொரூபமாக அக்னி மலையாக நெருப்பு பிழம்பாக இருந்ததாம். அடுத்ததாக மாணிக்கம் மலையாக திரேதா யுகத்திலும், தாமிர மலையாக துவாபர யுகத்திலும் கூறப்படுகிறது. தற்போது கல் மலையாகவும் உள்ளது.

    முக்தி என்று சொன்னாலே ஈசனின் திருவடியை அடைவது தான். அதேபோல அண்ணாமலையாரே நினைத்தாலே முக்தி. சிவபெருமானே மலையாக வைத்திருக்கும் தளம் தான் திருவண்ணாமலை. சிவபெருமானுக்கு உரிய தளங்களில் அக்னி தளமாகவும் உள்ளது. அதே போல சித்தர்களின் சொர்க்க பூமி திருவண்ணாமலை. இதற்கடுத்து தான் அண்ணாமலை என்று பெயர் உருவானது.

    அண்ணுதல் என்றால் நெருங்குவது என்று அர்த்தமாகும். இதற்கு எதிர்மறையான அர்த்தம் கொண்டது, அண்ணாமலை அதாவது நெருங்க முடியாதது என்ற அர்த்தமாகும். அடி முடி காணா அண்ணாமலையார் என்ற புகழ்பெற்ற பிரம்மன் மற்றும் விஷ்ணுவின் கர்வம் அழித்த புண்ணித தலம் இதுதான்.

    மேலும் சித்தர்களுக்கு எல்லாம் சித்தர் சிவபெருமான் தான். இதனால் தான் 18 சித்தர்களும், அவர்களின் சீடர்களான188 சித்தர்களும் அரூபமாக திருவண்ணாமலையில் இருக்கிறார்க்ள். அதேபோல திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலைப்பகுதியில் பல்வேறு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன.

    • ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர்.
    • சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்கள்.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார். அதன்படி, 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம். மேலும், அந்த சித்தர்கள் எங்கு குடிகொண்டு உள்ளனர் என்பதை இங்கு விரிவாக காண்போம்.

    அஸ்வினி - காலங்கி நாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய கோவில்களில் உள்ளது.

    பரணி -போகர் சித்தர் இவருக்கு பழனி முருகன் கோவிலில் தனி சமாதி உள்ளது.

    கார்த்திகை - ரோமரிஷி சித்தர் இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கூறப்படுகிறது).

    ரோகிணி - மச்சமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    மிருகசீரிடம் - பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர். பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது.

    திருவாதிரை - இடைக்காடர் இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில் உள்ளது.

    புனர்பூசம் - தன்வந்தரி சித்தர் இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவசமாதி ஆனவர்.

    பூசம் - கமலமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது.

    ஆயில்யம்- அகத்தியர் சித்தர் இவரது ஒளிவட்டம் குற்றாலம் பொதிகை மலையில் உள்ளது.

    மகம் - சிவ வாக்கிய சித்தர் இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது.

    பூரம் - ராமதேவ சித்தர் இவரது ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.

    உத்திரம் - காகபுஜண்டர் இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

    ஹஸ்தம் - கருவூரார் சித்தர் இவரது சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

    சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர் நண்ணாசேர் என்ற இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.

    சுவாதி - புலிப்பாணி சித்தர் இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

    விசாகம் - நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

    அனுஷம் - வால்மீகி சித்தர் இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    கேட்டை - பகவான் வியாசருக்கு உரிய நட்சத்திரம் இவரை நினைத்தாலே போதும். அந்த இடம் வருவார்.

    மூலம் - பதஞ்சலி சித்தர் இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

    பூராடம் - ராமேதவர் சித்தர் இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

    உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர் இவர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் திருப்பதி ஆகும்.

    திருவோணம் - தட்சிணாமூர்த்தி சித்தர் இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    அவிட்டம் - திருமூலர் சித்தர் இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

    சதயம் - கவுபாலர் சித்தர் இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

    பூரட்டாதி - ஜோதிமுனி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

    உத்திரட்டாதி - டமரகர் சித்தர் இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

    ரேவதி - சுந்தரானந்தர் சித்தர் இவரது ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

    எனவே, 27 நட்சத்திரக்காரர்களும் அவரவர்களுக்குரிய ஜீவசமாதி இடங்களுக்கு சென்று வணங்கினால் சித்தர்களின் அருளை முழுமையாக பெற்றலாம்.

    • சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் கருதப்பட்டு வருகிறது.
    • கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செ யலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் அருகே நெடார் ஆலங்குடி கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரம்மபுரீ ஸ்வரர், நித்திய கல்யாணி அம்பாள் சன்னதிகள் உள்ளன.

    இக்கோவில் முதன்மை திருக்கோயில் என்ற வகைபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பா ட்டில் உள்ளதுஇக்கோவிலில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.

    சித்தர்களால் பூஜிக்கப்பட்ட கோவிலாகவும், அதிசயம் பல நடந்த கோவிலாகவும் மக்களிடையே கருதப்பட்டு வருகிறது.

    ஆனால், தற்போது இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரை இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதுபோ ன்ற கோவில்களை அதன் பழமை மாறாது காப்பது அரசின் கடமையாகும்.

    இக்கோவிலை புதுப்பிப்ப தற்கும், திருப்பணிகள் செய்வதற்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    எனவே, அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு கோவிலில் திருப்பணிகள், கட்டுமான பணிகளை உடனே ஆரம்பித்து விரைவில் முடிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×