search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivaparvathi"

    • ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.
    • நடனக்கலையில் சிறக்கலாம்

    திருவாதிரை விரதம்:

    நாள் :

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்

    தெய்வம் :

    நடராஜர்

    விரதமுறை :

    பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.

    பலன் :

    நடனக்கலையில் சிறக்கலாம்

    சிறப்பு தகவல் :

    காலை 4.30 க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

    கேதார விரதம்:

    நாள் :

    புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7நாட்கள்.

    இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.

    தெய்வம் :

    கேதாரநாதர்

    விரதமுறை :

    ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.

    முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.

    பலன் :

    தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

    • மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.
    • இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

    தைப்பூச விரதம்:

    நாள் :

    தை மாத பூச நட்சத்திரம்

    தெய்வம் :

    சிவபெருமான்

    விரதமுறை :

    காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

    பலன் :

    திருமண யோகம்

    சிவராத்திரி விரதம்:

    நாள் :

    மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி

    தெய்வம் :

    சிவன்

    விரதமுறை :

    மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.

    முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம்.

    இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

    பலன் :

    நிம்மதியான இறுதிக்காலம்

    • குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
    • நல்ல வாழ்க்கை துணை அமையும்.

    உமா மகேஸ்வர விரதம்:

    நாள் :

    கார்த்திகை மாத பவுர்ணமி

    தெய்வம் :

    பார்வதி, பரமசிவன்

    விரதமுறை :

    காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

    பலன் :

    குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    கல்யாணசுந்தர விரதம்:

    நாள் :

    பங்குனி உத்திரம்

    தெய்வம் :

    கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)

    விரதமுறை :

    இரவில் சாப்பிடலாம்

    பலன் :

    நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

    • இதைத்தொடர்ந்து வரும் அமாவாசை முடிய 15 நாட்கள் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய காலங்களாகும்.
    • அச்சமயங்களில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதீகம்.

    மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்த பவுர்ணமிக்கு அடுத்த நாளான பாத்ரபத பகுளத்தில் தொடங்கும்.

    இதைத்தொடர்ந்து வரும் அமாவாசை முடிய 15 நாட்கள் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய காலங்களாகும்.

    மகாளய பட்சமான பிரதமை தொடங்கி 15 நாட்களில் ஒரு முறையும், மேலும் வழக்கப்படி மகாளய அமாவாசையன்றும் ஒருமுறையான இருமுறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மகாளய பட்சத்தில் மகாபரணி, மத்யாஷ்டமி, வியதீபாதம், வைதிருதி, ஷடசீதி ஆகிய நாட்களில் விசேஷமாக தர்ப்பணம் விடலாம்.

    இந்நாட்களில் விட முடியாதவர்கள் மற்ற ஏதாவதொரு நாட்களில் மகாளய பட்சத்திற்குள் ஒருமுறை அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    அச்சமயங்களில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதீகம்.

    மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

    ×