search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan refugees"

    • இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர்.
    • இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் உள்நாட்டு சண்டை நடைபெற்ற காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து படகுகளில் தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தனர். அவர்களை போலீசார் அழைத்து சென்று மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர். இதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டும் வருகிறார்கள்.

    இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்திலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதில், மீன்பிடிக்க செல்லவும், கச்சத்தீவு திருவிழாவிற்கும் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மூன்று படகுகளுடன் 22 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரனையில் தீபன் (வயது 35), சுதாகர் (42) ஆகிய இரண்டு பேர் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வ முகாமில் உள்ள அகதிகள் என்பது தெரியவந்தது. சட்ட விரோதமாக விதிகளை மீறி கடலுக்கு சென்ற அவர்களிடம் மீன் பிடிக்க செல்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.

    இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அகதிகளை அழைத்து சென்றது குறித்தும் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் குறித்தும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக் கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இதுவரை 265 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதி கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் (வயது 36), அவரது மனைவி மேரி (34), மகள்கள் கிருத்திகா (7), கிருஷ்மா (4) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் மன்னார்வளைகுடா பகுதியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகம் வந்ததாக தெரிவித்தனர்.

    அகதிகளாக வந்தவர்கள் கூறுகையில், வறுமையின் காரணமாகவும், தொடர்ந்து அங்கு வாழ வழியில்லாமல் போனதாலும் இங்கு வந்து தஞ்சமடைந்து உள்ளோம். தமிழகத்தில் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பம் நடத்தலாம் என்ற நம்பிக்கையுடன் முடிவு செய்து பிளாஸ்டிக் படகில் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் எங்களை போன்று ஏராளமானவர்கள் தமிழகம் வரத்துடிக்கிறார்கள். ஆனால் படகுக்கு கொடுக்க பணம் கிடைக்காததால் வாழவும் முடியாமல், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடியாமல் தவித்து வருவதாக கண்ணீருடன் கூறினர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 269 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கையில் இருந்து கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்தனர்.
    • தனுஷ்கோடி அருகே உள்ள 5-வது மணல் திட்டையில் இன்று காலை 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்கு சென்ற மீனவர்கள் பார்த்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பலர் உயிர் பிழைத்தால் போதும் என்று குடும்பம் குடும்பமாக தமிழகத்துக்கு அகதிகளாக வரத்தொடங்கினர்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை 240-க்கும் மேற்பட்டவர்கள் கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகளாக தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரத்திற்கு வந்தனர். கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதியாக வந்ததாக தெரிவித்த அவர்கள் அனைவரும், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இலங்கையில் இருந்து கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் மீட்டு மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். இதற்கிடையே தனுஷ்கோடி அருகே உள்ள 5-வது மணல் திட்டையில் இன்று காலை 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்கு சென்ற மீனவர்கள் பார்த்தனர்.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2-வது மணல் திட்டைக்கு விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 7 பேரையும் மீட்டனர்.

    விசாரணையில், அவர்கள் இலங்கை முல்லைத்தீவு, தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்த ஜோப்ரி மகன் நியூட்டன் வில்லியம்(வயது43), அவரது மனைவி வனிதா(38), மகன்கள் விசால்(15), தோணி(10), ஜோன்(8), அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மகள் ஷாலினி(17), அவரது மகன் ஆதீஸ்(15) என தெரியவந்தது.

    இவர்கள் கடந்த 27ந்தேதி இரவு 7 மணியளவில் இலங்கை முல்லைத்தீவில் இருந்து புறப்பட்டு படகு மூலம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை 2-ம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அவர்கள் ரூ.4 லட்சம் இலங்கை பணம் கொடுத்து வந்ததாகவும், தங்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு ராமேசுவரம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே வாழ வழியின்றி இங்கு வர நேரிட்டது என்று தெரிவித்தனர். 

    ×