search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sridhar Vembu"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்துள்ளது
    • இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

    இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கல்வி கற்பதற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறித்த விவாதம் இணையத்தில் நடந்துவருகிறது. இதற்கு காரணம் ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்து விட்டதாக பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதே ஆகும்.

    தனது பதிவில் அவர், இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 9 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கல்லூரிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர், சோஹோ Zoho நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, இந்தியாவில் நகர்புர ரியல் எஸ்டேட்களின் அதிக விலையினால் கல்வி பயில்வதற்கான கட்டணமும் கட்டுபடியாகாத அளவு உயர்ந்துள்ளது. இந்த ரியல் எஸ்டேட்களில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்.
    • எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும்.

    இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தற்போதுள்ள நிலைமையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிவிடும் என்று ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், தற்போதைய போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    பொருளாதார அடிப்படையில் பார்க்கும் போது, எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும், இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக மத்திய கிழக்கில் எது நடந்தாலும், அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மூன்றாவது அன்னிய செலாவனியும் பாதிக்கப்படும்.

    "மின்திறனை பொருத்தவரையில், நமக்கு புதுப்பிக்கத் தக்க மின்திறன் மட்டுமே தேவை. இதற்கான உள்கட்டமைப்புகளை நாம் மேம்படுத்த வேண்டும். நம்மிடம் அதிகளவில் திறமைமிக்கவர்கள் உள்ளனர். நமக்கு தேவையான ஒன்று திறமைமிக்கவர்களை சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவது மட்டும் தான். நமது தனியார் துறைகளில் இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    "நமது மொத்த வருவாயில் பத்து சதவீதத்தை இந்தியா வழங்குகிறது, மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இது இருமடங்கு அதிகரித்து, முன்னணி சந்தையாக மாறும். நமக்கு மெக்சிக்கோ மிகச்சிறப்பான சந்தையாக உள்ளது. மத்திய கிழக்கில் நாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம். தற்போது இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இதை கணிக்கவே முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா காலத்தில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்த போதும், ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனம் குறிப்பிட்ட அளவு வருமானத்தை ஈர்த்தது.
    • உலக அளவில் கவனம் பெற்று கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் ஸ்ரீதர் வேம்பு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

    டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்பட்டு கோலோச்சி வந்தது.

    கிராமப்புறங்களிலும் ஐ.டி. நிறுவனங்களை தொடங்கி வெற்றி பெற முடியும் என சாதித்து காட்டியவர் ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. இவர் உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வந்தாலும் தனது விருப்பமான கிராமப்புறங்களிலும் ஐ.டி. நிறுவனங்களை நடத்த நினைத்து தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை என்ற கிராமத்தில் ஐ.டி. நிறுவனத்தை தொடங்கி பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

    இவரது சேவையை பாராட்டி மத்திய அரசின் உயர் பதவியான தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினராக ஸ்ரீதர்வேம்புவை நியமனம் செய்தது. கொரோனா காலத்தில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்த போதும், ஸ்ரீதர் வேம்புவின் நிறுவனம் குறிப்பிட்ட அளவு வருமானத்தை ஈர்த்தது. உலக அளவில் கவனம் பெற்று கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் ஸ்ரீதர் வேம்பு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி சட்டையில் காணப்படுவார். நவீன கார்களில் செல்ல வசதி இருந்தும் பெரும்பாலும் சைக்கிள்களிலேயே சென்று வருகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீதர்வேம்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் தான் பழைய சாதத்தை சாப்பிட்டு வருவதாவும், அதன் பெருமை குறித்தும் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சில வருடம் காலமாக என் காலை உணவாக பழைய சோறு மாறி உள்ளது. எனது பாரம்பரிய முறையில் இந்த உணவை நான் எடுத்து வருகிறேன். எனக்கு பல காலமாக இரிட்டபிள் பவல் சின்ட்ரோம் எனப்படும் எரிச்சலுடன் கூடிய குடல் பிரச்சினை இருந்தது. இந்த நோய் தற்போது பூரணமாக குணமடைந்து விட்டது. அத்துடன் ஒவ்வாமைகளும் இருந்தன. தற்போது அவைகளும் இல்லாமல் போனது. ஒருவேலை இந்த பதிவு சிலருக்கு உதவும்.

    இவ்வாறு அந்த பதிவில் ஸ்ரீதர்வேம்பு குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களிலும் இது பகிரப்பட்டு வருகிறது. இந்நோய் பாதிப்புள்ள பலரும் ஸ்ரீதர்வேம்புக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். சிலர் பழையசோறு, ரெசிபி கேட்டு கருத்து பதிவிடுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக சிலர் அதுகுறித்து வீடியோக்களை இணைத்துள்ளனர்.

    ×