என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Stealth"
- வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்
- வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று, மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த கடம்பன் மகன் வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ,17 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்திவேலூர் மற்றும் பாலப்பட்டி பகுதி யில் அனுமதியின்றி திருட்டுத்தன மாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததது.
- பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் பாலப்பட்டி பகுதி யில் அனுமதியின்றி திருட்டுத்தன மாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததது.
தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் ராமச்சந்திரன் (23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 103 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பரமத்திவேலூர், நான்கு ரோடு, சிவா தியேட்டர் கார்னர், பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த பிச்சைபாண்டி மகன் சரவணன் என்கிற செந்தாமரைக்கண்ணன் (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பரமத்தி வேலூர் அருகே எல்லை மேடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த கீழ பாலபட்டியைச் சேர்ந்த சதாசிவம் என்ப வரது மகன் நிஷாந்த்(24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்