search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden roadblock"

    • பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வராததால் ஆத்திரம்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருமாரியம்மன் கோவில் தெரு பகு தியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சில தெருக்களில் குடிநீர் சரியாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட் டோர் வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • திடீரென்று பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    மங்கலம் :

    மங்கலம் அருகேயுள்ள பூமலூர்-பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்த்த மாணவர்கள் சாமளாபுரம், மங்கலம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் தங்களது பகுதிகளில் இருந்து அரசு பஸ்சுகளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த ஒரு மாதமாக அரசு பஸ்கள் உரிய நேரத்தில், பள்ளிப்பாளையம், பூமலூர் பகுதிகளுக்கு வருவதில்லை என தெரிகிறது. இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவதி அடைந்த மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் பள்ளிப்பாளையம் பகுதியில் திடீரென்று பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற மங்கலம் போலீசார் மாணவர்கள்- பெற்றோர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தி உரிய நேரத்தில் பஸ் வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×