search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suspension bridge"

    • பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன.
    • புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே புதிய ரெயில் பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டு, அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன இந்த பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன. பாலத்தின் மையப்பகுதி வழியாக கப்பல்கள் கடக்க வசதியாக செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலம் அமைகிறது.

    இதற்காக 77 மீட்டர் நீளமும் சுமார் 650 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலம், ரெயில்வே பாலத்தின் நுழைவுப்பகுதியில் வடிவமைக்கப்பட்டு நகரும் கிரேன்கள் மூலம் தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி சுமார் 2 மாதங்களாக நடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் தூக்குப்பாலம் அமையும் மையப்பகுதியில் உள்ள 2 தூண்கள் மீது கொண்டு வந்து வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

    இதை கொண்டாடும் வகையில் ரெயில்வே கட்டுமான நிறுவனம் சார்பில் நடுக்கடலில் வாணவேடிக்கை நடைபெற்றது. அதிகாரிகள், என்ஜினீயர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

     

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இனி அதனை திறந்து மூட தேவையான கேபிள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின்னர் தூக்குபாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.

    இந்த சோதனையானது, ரெயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தூக்குப்பாலம் வழியாக ரெயில் பாலம் முழுவதும் ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவர் அவருக்கு கூறினார்.

    இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதை நேற்று ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    • சுற்றுலா பயணிகள் கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
    • 450 மீட்டர் நீளமும், 120 மீட்டர் உயரமும் கொண்ட தொங்கு பாலம் அமைக்கபடுகிறது.

    ஊட்டி,

    சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை, பைக்காரா படகு இல்லம் மற்றும் பைக்காரா நீர் வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

    கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். பல்வேறு சாகச விளையாட்டுக்கள் அடங்கிய கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    சுற்றுலாத்துறையும் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்கவும், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் சாகச விளையாட்டுக்களை சுற்றுலா தலங்களில் கொண்டு வருவதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. இதன் ஒருபகுதியாக படகு இல்லத்தில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்லும் வகையில் 450 மீட்டர் நீளமும், 120 மீட்டர் உயரமும் கொண்ட தொங்கு பாலம் அமைக்கபடுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஒரு மாத காலத்தில் முடியும் என எதிர்பார்க்கபடுகிறது.

    இந்த பணிகள் முடிந்து இந்த தொங்கு பாலம் திறக்கபட்டால் அது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும். இதன் மேல் இருந்து படகு இல்லத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.

    ×