என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » TN Assembly ByElection
நீங்கள் தேடியது "TN Assembly ByElection"
தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மோடிக்கு காவடி தூக்கி வருகிறது என தேர்தல் பிரசாரத்தின் போது வைகோ கூறியுள்ளார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #Vaiko
மதுரை:
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். நாகமலை புதுகோட்டையில் அவர் திரண்டிருந்த மக்களிடையே பேசியதாவது:-
தேர்தல் முடிவு வந்த பின் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் தி.மு.க.வின் படை வீடாக மாறும். புதுச்சேரி உள்பட 39 பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்.
தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனை மாநில அரசும் கண்டு கொள்வதில்லை. தமிழ் மொழியே தெரியாத ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் மத்திய அரசு பணிகளிலும், ரெயில்வேயிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு தேர்வுகளில் கஷ்டப்பட்டு படிக்கும் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இதனை தட்டிக் கேட்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தைரியம் இல்லை.
பா.ஜனதா தேர்தலில் தோல்வி அடையும். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மோடிக்கு காவடி தூக்கி வருகிறது.
தற்போது உள்ள ஆட்சி குட்கா உள்ளிட்ட ஊழல்களில் சிக்கியுள்ளது. எனவே மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #Vaiko
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். நாகமலை புதுகோட்டையில் அவர் திரண்டிருந்த மக்களிடையே பேசியதாவது:-
தேர்தல் முடிவு வந்த பின் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் தி.மு.க.வின் படை வீடாக மாறும். புதுச்சேரி உள்பட 39 பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்.
தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனை மாநில அரசும் கண்டு கொள்வதில்லை. தமிழ் மொழியே தெரியாத ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் மத்திய அரசு பணிகளிலும், ரெயில்வேயிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு தேர்வுகளில் கஷ்டப்பட்டு படிக்கும் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இதனை தட்டிக் கேட்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தைரியம் இல்லை.
பா.ஜனதா தேர்தலில் தோல்வி அடையும். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மோடிக்கு காவடி தூக்கி வருகிறது.
தற்போது உள்ள ஆட்சி குட்கா உள்ளிட்ட ஊழல்களில் சிக்கியுள்ளது. எனவே மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #Vaiko
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X