என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » TTV
நீங்கள் தேடியது "TTV"
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. ஸ்டாலின், தினகரன், திருமாவளவன் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை:
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 24-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வரை அங்கிருந்த அவர்கள், பின்னர் சென்னை நுங்கம்பாக்கம் சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.
தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டாலும், அதை சாப்பிடாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் இருந்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர்.
இதுகுறித்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆளுங்கட்சியினர் ஆட்சி முடிந்த பிறகு நாட்டில் நடமாட வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமல்ல அனைத்து அமைச்சர்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படவில்லை’ என்றார்.
அதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவுடன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவை சேர்ந்த 10 நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், ‘ஒரு நபர் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் வரை எங்களால் எதுவும் சொல்ல முடியாது. எனவே வருகிற 7-ந் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வையுங்கள்’ என தெரிவித்தார். இதில் இடைநிலை ஆசிரியர்களின் நிர்வாகிகளுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அங்கிருந்து அவர்கள் திரும்பி வந்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ராபர்ட், கி.கண்ணன் கூறுகையில், ‘அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
எனவே எங்களுடைய நியாயமான முடிவு எட்டப்படும் வரை போராட்டத்தை தொடரும் நிலைக்கு அரசு தள்ளி இருக்கிறது’ என்று தெரிவித்தனர். #Stalin #TTVDinakaran #Thirumavalavan
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 24-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வரை அங்கிருந்த அவர்கள், பின்னர் சென்னை நுங்கம்பாக்கம் சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.
தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டாலும், அதை சாப்பிடாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் இருந்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர்.
இதுகுறித்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆளுங்கட்சியினர் ஆட்சி முடிந்த பிறகு நாட்டில் நடமாட வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமல்ல அனைத்து அமைச்சர்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படவில்லை’ என்றார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமியுடன், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ராபர்ட், கி.கண்ணன் உள்பட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
அதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவுடன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவை சேர்ந்த 10 நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், ‘ஒரு நபர் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் வரை எங்களால் எதுவும் சொல்ல முடியாது. எனவே வருகிற 7-ந் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வையுங்கள்’ என தெரிவித்தார். இதில் இடைநிலை ஆசிரியர்களின் நிர்வாகிகளுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அங்கிருந்து அவர்கள் திரும்பி வந்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ராபர்ட், கி.கண்ணன் கூறுகையில், ‘அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
எனவே எங்களுடைய நியாயமான முடிவு எட்டப்படும் வரை போராட்டத்தை தொடரும் நிலைக்கு அரசு தள்ளி இருக்கிறது’ என்று தெரிவித்தனர். #Stalin #TTVDinakaran #Thirumavalavan
எஸ்.வி. சேகரை கைது செய்ய அமைச்சர் ஜெயக்குமார் நடுங்குவதாகவும், வரும் தேர்தலுக்கு பிறகு அவர் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை:
புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள வீட்டில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. புதிதாக பதவி ஏற்கும் அரசு தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை பார்க்கும்போது மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் உள்ளது.
கமலின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
நான் மிரட்டல் விடும் தொனியில் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர்தான் தினமும் காலை எழுந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து மிரட்டல் விடும் தொனியில் பேசி வருகிறார்.
விவேக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்தான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார். முதலில் எஸ்.வி. சேகரை கைது செய்ய சொல்லுங்கள். அவரை கைது செய்ய பயந்து நடுங்குகிறார்கள்.
வரும் தேர்தலுக்கு பிறகு ஜெயக்குமார் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்.
சசிகலா நோட்டீஸ் மூலம் திவாகரனுக்கு உரிய பதில் தெரிவித்து விட்டார். நான் அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது வெற்றிவேல் உடன் இருந்தார்.
புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள வீட்டில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. புதிதாக பதவி ஏற்கும் அரசு தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை பார்க்கும்போது மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் உள்ளது.
கமலின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
நான் மிரட்டல் விடும் தொனியில் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர்தான் தினமும் காலை எழுந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து மிரட்டல் விடும் தொனியில் பேசி வருகிறார்.
விவேக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்தான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார். முதலில் எஸ்.வி. சேகரை கைது செய்ய சொல்லுங்கள். அவரை கைது செய்ய பயந்து நடுங்குகிறார்கள்.
வரும் தேர்தலுக்கு பிறகு ஜெயக்குமார் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்.
சசிகலா நோட்டீஸ் மூலம் திவாகரனுக்கு உரிய பதில் தெரிவித்து விட்டார். நான் அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது வெற்றிவேல் உடன் இருந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X