search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teacher transferred"

    • 19 ஆண்டுகளாக கவிதேவி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.
    • பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்துள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திகானூர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் அத்திகானூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் ஒரு ஆசிரியையும், ஒரு ஆசிரியரும் மற்றும் தற்காலிக ஆசிரியர் ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கவிதேவி மத்தூரில் உள்ள அரசு பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அதே ஆசிரியையை மீண்டும் அதே பள்ளிக்கு ஆசிரியையாக நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து உள்ளனர்.

    இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது, `அத்திகானூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 19 ஆண்டுகளாக கவிதேவி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.

    தற்போது நடைபெற்ற கலந்தாய்வு மூலம் அந்த ஆசிரியைக்கு மத்தூரில் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த ஆசிரியை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து நல்ல முறையில் பாடம் கற்பித்து வருவதால் அவரை பணிஇடமாற்றம் செய்தால், எங்கள் குழந்தைகளின் கல்வி பெரிதளவில் பாதிக்கப்படும்.

    மேலும், அடுத்துவரக்கூடிய ஆசிரியர்கள் இதுபோன்று நல்ல முறையில் கல்வி பயின்றுவிப்பார்களா? என்பது சந்தேகம் தான். எனவே, இந்த ஆசிரியை பணிஇடமாற்றம் செய்யக்கூடாது. உடனே அவரை மீண்டும் அத்திகானூர் அரசு பள்ளிக்கே பணியாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    பணி மாறுதல் பெற்ற ஆசிரியர் பகவானை, கட்டிப்பிடித்து “போகாதீங்க சார்” என மாணவ- மாணவிகள் கதறி அழுத சம்பவம் ஊடகங்களில் வெளியான நிலையில், அவரது பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    ஒரு பள்ளியை சீர்படுத்தி மாணவர்கள் மனதில் இடம் பிடித்த பிறகு மாறுதலாகி செல்லும் ஆசிரியரான சமுத்திரக்கனியை சுற்றி சூழ்ந்து ‘சார் போகாதீங்க சார்’ என்று உணர்ச்சி பொங்க அழுவார்கள். அது படம்.

    நிஜமாகவே அந்த ‘சாட்டையை’ மிஞ்சும் வகையில் ஒரு ஆசிரியருக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையே நடந்த பாசப் போராட்டம் பார்த்தவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆங்கில ஆசிரியர்.

    ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒரு காலம். ஆனால் இந்த காலத்தில் ஆசிரியர்- மாணவர் உறவு என்பது ஏதோ கடமைக்காகவே இருக்கிறது.

    ஆனால் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் ஆசிரியர் பகவான்.

    அவர் எப்படி பாடம் நடத்தி இருப்பார்? மாணவர்களிடம் எப்படி பழகி இருப்பார்? மாணவர்கள் எப்படி நேசித்து இருக்கிறார்கள் என்பதற்கு பள்ளியில் அரங்கேறிய பாசப் போராட்டமே சாட்சி.

    5 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.


    பகவான், இடமாறுதல் ஆகி இருப்பதை அறிந்ததும் மாணவர்களும், பெற்றோர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மிகச்சிறந்த ஆசிரியர், அவர் மாறுதலாகி செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். பள்ளிக்கூடத்துக்கே பூட்டு போட்டு போராடினார்கள்.

    இந்த நிலையில் இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக ஆசிரியர் பகவான் பள்ளிக்கு வந்தார்.

    உடனே மாணவ- மாணவிகள் வகுப்பறைகளை விட்டு வெளியே ஒடிவந்தனர். அவரை சூழ்ந்து கொண்டு ‘சார், போகாதீங்க சார், நீங்க எங்களுக்கு வேணும் சார்’ என்று மொத்தமாக வேண்டுகோள் விடுத்தார்கள்.

    அவர்களை பகவான் சமாதானம் படுத்தினார். ஆனால் மாணவர்களால் அவரது பிரிவை தாங்க முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறினார்கள்.

    சிலர் அவரது கால்களை கட்டிப்பிடித்தப்படி, ‘சார், போகாதீங்க சார்’ என்று அழுதனர். மாணவர்களின் கண்ணீர் கடலில் மிதந்த ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டு அழுதார். ஒவ்வொரு மாணவர்களின் தோளிலும் தட்டிக்கொடுத்து அழாதீங்க என்று ஆறுதல் படுத்தினார்.

    கூட்டத்தில் இருந்து பகவான் வெளியே நடக்க தொடங்கியதும் மாணவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர். ஒடிச்சென்று அவரை கட்டிப்பிடித்தபடி அழுதனர்.


    சார்... ப்ளீஸ் சார் போகாதீங்க சார்... என்று கண்ணீர் விட்ட அவர்களின் அழுகையை அடக்க முடியவில்லை.

    ‘எங்க பகவான் சார் எங்களுக்கு வேணும்! அவர் வரலைன்னா டி.சி.யை வாங்கிட்டு வேறு பள்ளிக்கு போயிடுவேன்’ இப்படி ஆளாளுக்கு தேம்பி தேம்பி அழுதபடியே கூறினார்கள்.

    வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார்.

    எனினும், மாணவர்களின் நெகிழ்ச்சி மிகுந்த பாசப் போராட்டம் ஊடகங்களில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் உருக்கியது. இதனை அடுத்து, அவரது பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Tamilnews
    ×