search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TEXTILE MERCHANTS"

    • வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.
    • மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் பிரபலமான ஈரோடு ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடந்து வருகிறது. இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும் இந்த வாரச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

    இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகளும் அதிக அளவில் வந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

    கனி மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை நடந்து வந்த நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக அகற்றப்பட்டது. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் வாரச்சந்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன் ஜவுளி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷிடம் ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை 60 ஆண்டுகளாக நமது அடையாளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் 720 வியாபாரிகள் பயன் பெற்று வந்தனர். 2018-ல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டுமானப் பணி தொடங்கிய போது வாரச்சந்தை வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் கனி மார்க்கெட் வணிக வளாக காலி இடத்தில் மீண்டும் வாரச் ச்சந்தை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர்.

    ஆனால் இதுவரை வாரச் சந்தை அமைக்கப்பட வில்லை. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச் சந்தையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தனியாருக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்பதில்லை.

    எனவே மாநகரத்தின் மையப் பகுதியான கனி மார்க்கெட்டில் மீண்டும் வாரச்சந்தை அமைக்கப்பட்டால் அதை நம்பியுள்ள 720 வியாபாரிகளும் பயன்பெறுவர். இதன் மூலம் மாநகராட்சிக்கும் உரிய வருவாய் கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருச்சி விமான நிலைய பகுதியில் அமைந்துள்ள ஜவுளி வியாபாரிகள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
    • ஏர்போர்ட் பகுதியில் கடந்த இரு தினங்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ைளயில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டு மென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி:

    திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் அன்பு நகர் பகுதியில் வசித்து வரும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் நிதிஷ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையும் ஒரு கிலோ வெள்ளி நகைகளும் கொள்ளை போனது.

    இந்த நிலையில் நேற்று காலை அதே அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது.

    திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தனது வீட்டை சென்னையைச் சேர்ந்த துணி வியாபாரிகளான கபீர் (வயது 30) மற்றும் மீரான் (32) ஆகிய இருவருக்கும் வாடகைக்கு விட்டிருந்தார்.

    இதற்கிடையே கபீர் மற்றும் மீரான் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேற்கண்ட இருவரும் மொத்தமாக ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

    இவர்களிடம் பணிபுரிபவர்களாக சுமார் நான்கு முதல் ஐந்து நபர்கள் அடிக்கடி இந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    சென்னை சென்றிருந்த இருவரும் திரும்பி வந்தபோது, அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. பின்னர் அவர்கள் இதுபற்றி உடனடியாக ஏர்போர்ட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏர்போர்ட் போலீசார் சோதனை செய்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த துணிகள் சிதறி கிடப்பதை கண்டனர்.

    ஆனால் இந்த வீட்டில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என தெரிய வந்தது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏர்போர்ட் பகுதியில் கடந்த இரு தினங்களாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ைளயில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டு மென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×