என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Teynampet police probe
நீங்கள் தேடியது "Teynampet police probe"
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று காலை வாலிபர் ஒருவர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அரசியல் தொடர்பான முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றையும் கமல் அந்த வீட்டில் வைத்தே வெளியிட்டு வருகிறார்.
2 மாதத்திற்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் மர்ம வாலிபர் ஒருவர் நுழைந்தார். சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அவரை காவலாளிகள் மடக்கி பிடித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அவர் தன்னை கமல் ரசிகர் என்று கூறினார். அவரை பார்ப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் தேனாம்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கமலின் வீட்டில் இன்று காலை மேலும் ஒரு வாலிபர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பக்க இரும்பு கேட் வழியாக ஏறி உள்ளே குதித்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.
பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ள மலைச்சாமி அவரை பார்ப்பதற்காகவே சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் கமலின் செயல்பாடுகள் உள்ளன.
அரசியல் களத்தில் கமல் வேகம் காட்டி வரும் நிலையில் அவரது வீட்டில் அடுத்தடுத்து 2 வாலிபர்கள் புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.
இன்று அதிகாலையில் வாலிபர் மலைச்சாமி கமல் வீட்டில் புகுந்தபோது அங்கு காவலாளி மட்டுமே இருந்தார். கமல் வீட்டில் இல்லை. அவர் நியூயார்க் சென்றுள்ளார். இருப்பினும் கமல் வீட்டுக்கு வந்ததற்கான நோக்கம் குறித்து மலைச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அரசியல் தொடர்பான முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றையும் கமல் அந்த வீட்டில் வைத்தே வெளியிட்டு வருகிறார்.
2 மாதத்திற்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் மர்ம வாலிபர் ஒருவர் நுழைந்தார். சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அவரை காவலாளிகள் மடக்கி பிடித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அவர் தன்னை கமல் ரசிகர் என்று கூறினார். அவரை பார்ப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் தேனாம்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கமலின் வீட்டில் இன்று காலை மேலும் ஒரு வாலிபர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பக்க இரும்பு கேட் வழியாக ஏறி உள்ளே குதித்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.
பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அவரது பெயர் மலைச்சாமி என்று விசாரணையில் தெரிய வந்தது. புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
தமிழக அரசியலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் கமலின் செயல்பாடுகள் உள்ளன.
அரசியல் களத்தில் கமல் வேகம் காட்டி வரும் நிலையில் அவரது வீட்டில் அடுத்தடுத்து 2 வாலிபர்கள் புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.
இன்று அதிகாலையில் வாலிபர் மலைச்சாமி கமல் வீட்டில் புகுந்தபோது அங்கு காவலாளி மட்டுமே இருந்தார். கமல் வீட்டில் இல்லை. அவர் நியூயார்க் சென்றுள்ளார். இருப்பினும் கமல் வீட்டுக்கு வந்ததற்கான நோக்கம் குறித்து மலைச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X