search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft in running bus"

    • பரமேஸ்வரி, கணவருடன் தனியார் பஸ்சில் கச்சிரா யபாளையம் புறப்பட்டார்.
    • பஸ்சிலியே கைப்பையை தவறவிட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில் உள்ள குளத்துமேட்டு வீதி யில் வசிப்பவர் பரமேஸ்வரி (வயது 26). இவருக்கும் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த விவேக்பாபு (31) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 20 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்தது. இவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.தனது பெற்றோருடன் சில நாட்கள் தங்க முடி வெடுத்த பரமேஸ்வரி, கணவருடன் நேற்று இரவு தனியார் பஸ்சில் கச்சிரா யபாளையம் புறப்பட்டார். பஸ் பயணத்தின் போது நகை அணிந்து செல்வது பாதுகாப்பில்லை என்ப தற்காக, முருக்கு செயின், மோதிரம், தோடு, கொலுசு, ரூ.3 ஆயிரம் பணம் ஆகிய வற்றை கைப்பையில் வைத்துக் கொண்டு வந்துள்ளார்.

    கச்சிராயப்பாளை யத்தில் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் பஸ் சென்றது. பரமேஸ்வரியும் அவரது கணவரும் கூச்சலிடவே, சிறிது தூரம் தள்ளி பஸ் நிறுத்தப்பட்டது. இதில் 20 நாள் கைக்குழந்தையும், விவேக்பாபுவும் பஸ் கம்பியில் மோதினர். இதனால் குழந்தை அழுதது. பஸ்சினை விட்டு வேகமாக இறங்கி குழந்தையின் தலையை தேய்த்துவிட்டுபடி தாய் வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது கைப்பை யை காணவில்லை. குழந்தை அழுத பதட்டத்தில் பஸ்சிலியே கைப்பையை தவறவிட்டிருக்கலாம் என்ற சந்தேகமடைந்த பரமேஸ்வரி நேற்றிரவே அந்த தனியார் பஸ்சினை தனது கணவருடன் தேடிச் சென்றார். அருகிலிருந்த பெட்ரோல் பங்கில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்த டிரைவர், கண்டக்டரிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக் குப்பின் முரணாக பதில் கூறினர்.

    மேலும், பஸ்சில் சி.சி.டி.வி. ஏன் வைக்க வில்லை என்ற கேள்விக்கு, நீ என்ன ஆர்.டி.ஓ.-விலா பணி செய்கிறாய் என்று பஸ் ஊழியர்கள் பரமேஸ்வரி யிடம் பதில் கூறியுள்ளனர். எனவே, உடனடியாக கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் விரைந்து வந்த பரமேஸ்வரி, நடந்த அனைத்து விஷயங்களை யும் எழுத்துப் பூர்வமாக புகாராக அளித்தார். மேலும், பஸ் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், தனது நகையை கண்டு பிடித்து தருமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×