search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumurthy Dam farmers struggle"

    • பொள்ளாச்சியில் 27-ந் தேதி நடக்கிறது
    • விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பொள்ளாச்சி,

    ஆழியாரில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி பொள்ளாச்சியில் வருகி 27-ந் தேதி 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிஏபி திட்டக்குழுத்தலைவர் தெரிவித்துள்ளார்.

    பிஏபி திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த திட்டத்திற்கு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஏபி விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நேற்றுமுன்தினம் ஆழியாறு அணை விவசாயிகள் பொள்ளாச்சியில் 1500-க்கும் அதிகமானோர் பங்கேற்று ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்நிலையில், திருமூர்த்தி அணை பாசன சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோச னைக்கூட்டம் நெகமத் தில் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. இந்த ஆலோச னை கூட் டத்தில் திருமூர்த்தி அணை பாசன சங்கங் களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆழியாறு அணை யிலிருந்து ஒட ்டன்சத் திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட அரசுக ்கோரிக்கை வைத்து வருகிற 27-ந் தேதி பொள் ளாச்சியில் ஆர்ப ்பாட்டம் நடத்து வது என முடிவு செய்யப் பட்டது.

    இது குறித்து பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரம சிவம் கூறு கையில், வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் பாலாறு படுகையை சேர்ந்த திருமூர்த்தி அணை பாசன நீரை பயன்படுத்தும் 25 ஆயிரம் விவ சாயிகள் பங்கேற்க உள்ளோம் என்றார். 

    ×