search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Three College Students Arrested"

    சென்னை மாநகர பேருந்தில் பட்டாகத்தியுடன் பயணித்த ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #StudentsCarryingKnives #PublicNuisance
    சென்னை:

    சென்னையில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக மாணவர் குழுக்களிடையே பிரச்சினை ஏற்படும்போது, பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறி ரகளை செய்கின்றனர். இது மற்ற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்துகிறது. இத்தகைய மாணவர்களை ஒடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



    இந்நிலையில், நேற்று மாநிலக் கல்லூரி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் ஒரு மாணவன் படிக்கட்டில் அமர்ந்தபடி, பட்டாக்கத்தியை சாலையில் தீப்பொறி பறக்க உரசிக்கொண்டு வந்துள்ளான். இந்த மாணவனின் செயலைப் பார்த்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்திய அண்ணா சதுக்கம் போலீசார், இது தொடர்பாக மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கத்தியுடன் பயணித்த மேலும் 3 மாணவர்கள் இன்று கைது  செய்யப்பட்டுள்ளனர். #StudentsCarryingKnives #PublicNuisance
    ×