search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Track Work"

    • திருச்சி - பாலக்காடு டவுன் ரெயில், 17-ந் தேதி வரையில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
    • ஜம்முதாவிக்கு பாரத் கவுரவ்ரெயில் இன்று இயக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    மதுக்கரை பகுதியில் ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால் திருப்பூர் வழியாக கோவைக்கு இயக்கப்படும் சில ெரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை - கேரளா மாநிலம் பாலக்காடு டவுன் மாலை 6மணி பயணிகள் ரெயில் 12, 13, 15, 16, 27-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.கேரளா மாநிலம் சொரனூர் - கோவை காலை 8:20 மணி சிறப்பு ரெயில் 17-ந் தேதி வரையில் பாலக்காடு டவுன் வரை மட்டுமே இயக்கப்படும்கோவை - சொரனூர் மாலை 4:30 மணி சிறப்பு ரெயில் 17ந் தேதி வரையில் பாலக்காட்டில் இருந்து மாலை 5:55 மணிக்கு இயக்கப்படும். மங்களூர் சென்ட்ரல் - கோவை காலை 9 மணி விரைவு ரெயில் 17-ந் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்பாலக்காடு டவுன் - ஈரோடு மதியம் 2:40 மணி பயணிகள் ரெயில் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையில் கோவையில் இருந்து மாலை 4:28 மணிக்கு இயக்கப்படும்ஈரோடு - பாலக்காடு டவுன் காலை 7:15 மணி பயணிகள் ரெயில் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையில் கோவை வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு டவுன் மதியம்1மணி ரெயில், 17-ந் தேதி வரையில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.சொரனூர் - கோவை மாலை 3:10 மணி பயணிகள் ரெயில் 12, 13, 15, 16, 17ந் தேதிகளில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.மங்களூர் சென்ட்ரல் - கோவை காலை 11:05 மணி இன்டர்சிட்டி விரைவு ரெயில் 17ந் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பாரத் கவுரவ் ரெயில் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜம்முதாவிக்கு பாரத் கவுரவ்ரெயில் இன்று இயக்கப்படுகிறது.

    கோவை - ஜம்முதாவி(06903) ரெயில் இன்று காலை, 7:45 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நாளை மறுநாள் 13-ந் தேதி இரவு, 1:30 மணிக்கு ஜம்முதாவி சென்றடையும்.ரெயிலில் தலா ஒரு முதல் வகுப்பு ஏ.சி., மற்றும் ஏ.சி., இரண்டடுக்கு, 8ஏ.சி., மூன்றடுக்கு, ஒரு தூங்கும் வசதி உள்ளிட்ட 14 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    திருப்பூர், ஈரோடு, சேலம், ஒயிட்பீல்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சீராலா, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜான்சி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×