search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribute to the martyred guards"

    • ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
    • ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உயிர் நீத்த காவலர்களின் நினைவுவாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    மொடக்குறிச்சி:

    காவல்துறையில் உயிர் நீத்த காவலர்களுக்கான காவலர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஈரோடு மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உயிர் நீத்த காவலர்களின் நினைவுவாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கூடுதல் கலெக்டர் மதுபாலன், ஏ.டி.எஸ்.பி.க்கள் பாலமுருகன், கனகேஸ்வரி, ஜானகிராமன் ஆயுதப்படை டி.எஸ்.பி. சக்திவேல் மற்றும் டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து உயிர்நீத்த காவலர்களுக்காக மரியாதை செலுத்தும் விதமாக வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    ×