என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Two-way street"
- கருங்காலகுடி-சிங்கம்புணரி சாலை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ளது கருங்காலக்குடி. இங்கிருந்து 18 சுக்காம்பட்டி வழியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்லும் சாலை உள்ளது. இதனை இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பக்ருதீன் அலி அகமத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அது நெடுஞ்சாலை துறை பரிசீல னைக்கு அனுப்பப்பட்டி ருந்தது. இது குறித்து நெடுஞ்சாலை துறையின் மேலூர் பகுதி உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கருங்காலக்குடி பேட்டையில் இருந்து சிங்கம்புணரி வரை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளீர்கள். அது பரிசீலணையில் உள்ளது. மேலும் அதை 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும். எனவே கருங்காலக்குடி பேட்டையில் இருந்து 18 சுக்காம்பட்டி வரை அதனை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24 திட்டத்தில் சேர்த்து அரசுக்கு பிரேணை அனுப்பப்படும் என தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்