என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "union protest"
- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மேட்டூர் சின்ன பார்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூகிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.
நங்கவள்ளி:
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மேட்டூர் சின்ன பார்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூகிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.
உள்ளாட்சித் துறை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் 152, 139, 115, 10 ஆகிய அரசாணைகளை திரும்ப பெற வேண்டும், உள்ளாச்சி பணிகளில் காண்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,
ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
- ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
சூலூர்,
சூலூர் அருகே நீலாம்பூரில் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்க பாதுகாப்பு பேரமைப்பு, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர் தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு சுங்கச்சாவடியை கடக்கும் பொழுதும் அங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒரு வாகனத்திற்கு இவ்வளவு என நிர்ணயித்து லஞ்சத் தொகை கேட்கின்றனர்.
இந்த லஞ்ச நடவடிக்கையை ஒழிக்க வேண்டும். நீலம்பூர் எல்என்டி புறவழி சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பன உள்பட 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், சமூக நீதி தொழிலாளர் தொழிற்சங்கத்தை சேர்ந்த நந்தகுமார், ஓட்டுநர் உரிமைக்குரல் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்