search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarakhand Police"

    • கயிறு கட்டி தொங்கு பாலத்தின் மேலிருந்து வீரர்கள் இழுக்க நாய் பத்திரமாக மீட்கப்படுகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாய் மீது பரிவு காட்டி, அதனை பத்திரமாக மீட்ட போலீசாரை பாராட்டி பதிவிட்டனர்.

    உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, அசாம், உத்தரகாண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாயை போராடி மீட்ட வீடியோவை உத்தரகாண்ட் காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    அதில், பாகிரதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உத்தரகாசியின் ஜோஷியாடா பகுதியில் ஒரு தொங்கு பாலத்தின் கீழே ஆற்று வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கி தவிக்கிறது. அதனை பத்திரமாக மீட்க தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஒரு வீரர் பாலத்தில் இருந்து கீழே இறங்கி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாயின் உடலில் துணியை கட்டுகிறார். அதன் மீது கயிறு கட்டி தொங்கு பாலத்தின் மேலிருந்து வீரர்கள் இழுக்க நாய் பத்திரமாக மீட்கப்படுகிறது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாய் மீது பரிவு காட்டி, அதனை பத்திரமாக மீட்ட போலீசாரை பாராட்டி பதிவிட்டனர்.


    • கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி துவங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதி சிவராத்திரி நாளில் நிறைவு செய்ய உள்ளனர்.
    • கடந்த காலங்களில் கன்வர் மேளாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது.

    கன்வர் யாத்திரை என்பது வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும். தென்னிந்தியாவில் முருகப் பெருமானுக்கு காவடி சுமந்து, பாத யாத்திரையாக பல கி.மீ., தூரம் நடந்தே வருவது போல், வடக்கில் சிவபெருமானுக்காக பாதயாத்திரை மேற்கொள்வதாகும். இதை இந்துக்களின் தவக்காலம் என்றே குறிப்பிடுகிறார்கள். இந்த ஆண்டு கன்வர் யாத்திரை செல்வதற்கு ஏராளமான பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

    கன்வர் யாத்திரை மேற்கொள்பவர்களை கன்வரியார்கள் என அழைப்பதுண்டு. வெகு தொலைவில் இருந்து பாத யாத்திரையாக வரும் இவர்கள் கங்கையில் புனித நீரை சேகரித்து, தோளில் சுமந்து சென்று பல்வேறு சிவாலயங்களிலும் அபிஷேகம் செய்வார்கள்.

    இதற்காக ஒரு மாத காலம் கடுமையான விரதம் இருந்து, இவர்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள். இந்த கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி துவங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதி சிவராத்திரி நாளில் நிறைவு செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தரகாண்ட் டிஜிபி அபினவ் குமார் கூறுகையில்,

    கன்வர் மேளா யாத்திரையின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் மக்களின் மத நம்பிக்கை ஆகியவற்றின் பார்வையில் உத்தரகாண்ட் காவல்துறைக்கு ஒரு முக்கியமான சவாலாக உள்ளது.

    இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஜூலை 1-ந்தேதி 8 மாநில காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் மத்திய ஏஜென்சிகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த முறை கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசலை தடுக்க கண்காணிப்பு நோக்கங்களுக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்த உள்ளோம்.

    கடந்த காலங்களில் கன்வர் மேளாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து நமக்கு கிடைத்து வரும் ஒத்துழைப்பு, ஆதரவு கொண்டு இதை வெற்றிகரமாக முடிப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம். யாத்ரா நல்லபடியாக நடக்கும் என்று கூறினார்.

    ×