search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volunteer Disruption"

    • அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் மிகவும் கலக்கம் அடைந்து கவலையில் உள்ளனர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளு மன்ற தேர்தலில் இந்திய அளவில் பாரதீய ஜனதா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும் தமிழ கத்தில் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 170 இடங்கள் தான் கிடைக் கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக ஊடகங்களில் பரபரப்பாக ஒளிபரப்பப் பட்டன.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அ.தி.மு.க., பாரதீய ஜனதாவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந் தது.

    காரணம் அ.தி.மு.க. இந்த முறை பா.ம.க.வுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென பா.ம.க. பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்தத்தது.

    இதனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்து போட்டி யிட்டது. எனவே அ.தி.மு.க. கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

    அதற்கேற்ப நேற்று வெளியான இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 26 முதல் 30 தொகுதிகளும் அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 முதல் 8 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    சி.என்.என். நியூஸ் 18 கருத்து கணிப்பில் தி.மு.க. கூட்டணி 36 முதல் 39 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 1 முதல் 3 இடங்களிலும் வெற்றி பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    டி.வி.9 கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 4 இடங்க ளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

    தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

    இப்படி ஒவ்வொரு டி.வி.யிலும் வெளியான கருத்துக் கணிப்பை பார்க்கும் போது அ.தி.மு.க.வுக்கு அதிகபட்சம் 8 இடங்கள், குறைந்த பட்சம் 2 தொகுதிதான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மிகவும் கலக்கம் அடைந்து கவலையில் உள்ளனர். ஆனாலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில, "கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும்" என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அரசியலை தீர்மானித்த அ.தி.மு.க. இப்போது இவ்வளவு பல வீனமாகி விட்டதே என்று அ.தி.மு.க. தொண்டர்கள் புலம்புவது கேட்க முடிந்தது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்து கடுமையாக உழைத்தாலும், கூட்டணியை சரியாக அமைக்காமல் கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுவதாகவும் கட்சிக்காரர்கள் கூறி வருகின்னர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி.தினகரன், சசிகலா என 4 அணியாக இப்போது காட்சியளிப்பதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ள தாகவும், அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் கட்சியின் எதிர்காலம் ஒன்றாக இருக் கும் என்றும் பேசி வருகின்ற னர்.

    ஆனால் அதே சமயம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி கால் ஊன்ற முடியாது என்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இப்போது அக்கட்சிக்கு 3 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளதை அறிந்து பா.ஜனதாவினர் குதூகலம் அடைந்துள்ளனர்.

    அண்ணாமலையின் உழைப்பு பிரதமர் மோடி யின் பிரசாரம் பா.ஜனதா கட்சியை வளர்ச்சியை நோக்கி கொண்டு சென் றுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். எனவே எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது 4-ந்தேதி தெரிந்து விடும்.

    அதன் பிறகுதான் தி.மு.க., அ.தி.மு.க.வில் என்னென்ன நடவடிக்கைகள் இருக்கும் என்பது தெரிய வரும்.

    ×