search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warns"

    • வணிகர்கள், வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை
    • சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வணிகர்கள், வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அருணா தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட் டது.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருணா கூட்டத்தில் பேசியதாவது:-

    தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கால் ஆன பைகள், கப்புகள், டம்ளர்கள், கரண்டிகள், முலாம் பூசிய காகித தட்டுகள், சாப்பாட்டு இலைகள், தோரணம் மற்றும் கொடிகள் உள்ளிட்ட 19 வகையான பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆலோசனை கூட்டத்தில் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாம கேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், வருவாய் கோட்டாட்சி யர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமதுகுதரதுல்லா (கூடலூர்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, ஊட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் உள்பட அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 4 தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து
    • உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 20 ஆலைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் தரமாக தயாரிக்க வேண்டும் எனவும், கலப்பட தேயிலை தூள்கள் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மாவட்டம் முழுவதும் கலப்பட தேயிலை தூள் குறித்த விழிப்புணர்வு அவ்வப்போது பொது மக்கள் இடையேயும், தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளின் அளவை கண்காணித்து அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    இதுபோல் தேயிலை வாரிய உத்தரவை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 20 தொழிற்சாலைகளுக்கு சோக்காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல் நான்கு தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் மூன்று மாதத்திற்கு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

    • மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன.
    • சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையும் மீறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இங்குள்ள வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு வனத்துறை சாா்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது தெரியவந்தது. தற்போது வனப் பகுதியில் நிலவும் வறட்சியால் குடிநீருக்காக காலை, மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன. இந்நிலையில், அமராவதி வனச்சரகம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையை கடந்து செல்லும் யானைகள் மீது கற்களை வீசுவது, செல்பி எடுக்க முயல்வது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல, புகைப்படம் எடுப்பதற்காக அருகில் சென்று யானைகளை தொந்தரவு செய்கின்றனா். இதனால் கோபம் அடையும் யானைகள் சுற்றுலாப் பயணிகளை துரத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்நிலையில் யானைகளை தொந்தரவு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: -

    உடுமலை - மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கி யானைகளை தொந்தரவு செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் மீறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், எல்லை மீறுபவா்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண் (180042 52650)
    • கட்டுமான தொழிலாளர் விபத்தில் உயிரிழந்ததால் அவருக்கு உதவிதொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் காலாண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு முன்பணம் செலுத்தி பணிக்கு ஈடுபடுத்தினால் கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தோட்ட நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் வழங்கி பணியில் ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதன்மையான பணியாகும். கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண் (180042 52650) என்ற எண்ணை அதிக அளவு பொதுமக்கள் கூடுமிடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் இருப்பின் பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான நலவாரியங்களின் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் விபத்தில் உயிரிழந்ததால் அவருக்கு உதவிதொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    கூட்டத்தில் தொழிலாளர் உதவி கமிஷனர் அமலாக்கம், சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின், தொழிற்சங்க பிரநிதிகள், அரசு சார்பற்ற உறுப்பினர்கள் (ஆதிதி ராவிடர், பழங்குடியினர் இன உறுப்பினர்கள்) மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் நாவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின்வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும்.

    கோவை,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்கவும், மனிதர்கள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைக்கப்பட்டதினால் மின்வேலிகளில் மனிதர்களும், விலங்குகளும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    மின் வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறி உள்ளார்.

    பொதுமக்கள் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும், மின் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியனை கொண்டு பணி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

    மின் கம்பிகள் மற்றும் இழுவை கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தக்கூடாது. மின் நுகர்வோர்கள் தங்களது மின் வயரிங்குகளை முறையாக ஆய்வு செய்து பழுதடைந்த வயரிங்குகளை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மின் நுகர்வோர் தங்களது வீடுகள், வளாகத்தில் மின் இணைப்பில் ஆர்சிடி, இஎல்சிபி-யை பொருத்து மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது அருகில் மின் பாதைகள் இருப்பின் உரிய இடை வெளியோடும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் பணிகள் மேற்கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • படுகொலை செய்யப்பட்டதாக பீகாரில் உள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது.
    • வீட்டின் குளியலறை அருகே கையின் நரம்பை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பூர் :

    பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த இளைஞர் திருப்பூரில் படுகொலை செய்யப்பட்டதாக பீகாரில் உள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை ஆய்வு செய்தபோது மதுபானியைச் சேர்ந்த ஷம்பு முகையா என்ற இளைஞர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

    ஷம்பு முகையா தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருந்தார். தனது தங்கையின் திருமணம் நின்று விட்டதால் அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் குளியலறை அருகே கையின் நரம்பை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்த மனைவி சரண்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    ஆனால் ஷம்பு முகையா மீன் வாங்கும்போது கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்று பொய்யான செய்தியை பரப்பிய நபர் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தெரிவித்துள்ளார்.

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

    கரூர்:

    கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ளநீர் 1.60 லட்சத்திற்கு (கனஅடி) மேல் மேட்டூர் அணைக்கு வருவதன் காரணமாக நேற்று மேட்டூர் அணையில் இருந்து 1.60 லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் 3-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல், காவிரி ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் காவிரி ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் இருக்க இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது."

    தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் சர்ச்சைகுரிய கருத்தை பேசியதாக மத்திய-மந்திரி மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #ManekaGandhi #ElectionCommission
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி சுல்தான்பூர் தொகுதியில் உள்ள சர்கோதா கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட மேனகா காந்தி, தனக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஏ.பி.சி.டி., என வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்றார் போல் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்று பேசியிருந்தார்.



    இந்நிலையில் மேனகா காந்தியின் இந்த சர்ச்சைக் கருத்துக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இதுபோன்ற நடத்தை விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

    மேனகா காந்தி கடந்த 11-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியிருந்தார். அதனால், பொதுக் கூட்டம், பேரணி, பேட்டி போன்ற செயல்களில் ஈடுபட தேர்தல் ஆணையம் அவருக்கு கடந்த 15-ம் தேதி 48 மணி நேரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #ManekaGandhi #ElectionCommission 
    ‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வியை தலைமை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்துள்ளது. #ElectionCommission #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, கடந்த 3-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, ‘மோடியின் ராணுவம்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவருக்கு மாநில தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதை நக்வி ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில், அவரை தலைமை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்துள்ளது. அந்த உத்தரவில் தேர்தல் கமிஷன் கூறியிருப்பதாவது:-

    ராணுவம் தொடர்பாக தேர்தல் பிரசாரங்களில் பேசுவதை தவிர்க்குமாறு ஏற்கனவே கூறி இருந்தோம். அதையும் மீறி அப்படி பேசிய முக்தார் அப்பாஸ் நக்வியை எச்சரிக்கிறோம். எதிர்காலத்தில், அரசியல் பிரசாரத்துக்கு ராணுவத்தை பயன்படுத்தாமல் கவனமாக இருக்குமாறு அவரை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #ElectionCommission #MukhtarAbbasNaqvi
    கிராமத்தில் பணியில் இல்லாத வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. #Shilpaprabhakar #VAO
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தாசில்தார்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுதொடர்பான அவருடைய பேச்சு ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    கிசான் யோஜனா திட்டத்தில் (பிரதமர் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்த திட்டம்) பயன்பெற 2 முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் நீங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டதற்கு அவர் அலுவலகத்தில் இல்லை என்கிறார்கள்.

    கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லோரும் அவர்கள் பணியாற்றக்கூடிய கிராமத்தில் இருந்துதான் விண்ணப்பங்களை வாங்க வேண்டும். அதிக வயதானவர்கள் என்னை தேடி வந்து மனு கொடுக்கிறார்கள். அந்த விண்ணப்பத்தில் எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து உள்ளனர்.

    ஆனாலும் கிராம நிர்வாக அலுவலர் மனுவை வாங்காமல் விட்டு உள்ளார். அவர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு இங்கு வந்து உள்ளார். அந்த அம்மாவுக்கு 80 வயது இருக்கும். உங்களுக்கு இந்த சின்ன வேலையை கூட செய்ய முடியவில்லை என்றால் என்ன வேலை செய்வீர்கள்.

    எல்லா கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து களப்பணியாற்ற வேண்டும். காலையில் இருந்து இரவு வரை விண்ணப்பங்கள் வாங்க வேண்டும்.

    நீங்கள் முழுமையாக விண்ணப்பங்கள் வாங்காமல், நான் எப்படி இந்த விவரத்தை அனுப்புவது, எத்தனை விண்ணப்பங்கள் தகுதி உடையவை, எத்தனை தகுதியற்றவை என்று, கிராம நிர்வாக அலுவலர் சரியாக வேலை பார்த்து இருந்தால் அந்த அம்மா இங்கே வந்து இருக்க வேண்டாம். அந்த அம்மா வீட்டிலேயே தான் இருக்கிறார்.

    வீட்டுக்கு சென்று விண்ணப்பம் வாங்காமல் எப்படி எனக்கு அறிக்கை கொடுக்கிறீர்கள். நான் எந்த நேரத்திலும், எந்த கிராமத்திற்கும் விசாரணைக்கு வருவேன். அந்த கிராமம் பற்றிய முழுவிவரத்துடன், கிராம நிர்வாக அலுவலர் இருக்க வேண்டும்.

    அந்த கிராமத்தில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். கிராம நிர்வாக அலுவலர் எத்தனை விண்ணப்பங்கள் தகுதி உடையவை, எத்தனை தகுதியற்றவை என்ற பட்டியலுடன் இருக்க வேண்டும்.

    யார், யாரை சென்று பார்த்து உள்ளீர்கள் என்ற விவரமும் இருக்க வேண்டும். நான் போய் பார்க்கும்போது யார் எல்லாம் ஊரில் இல்லையோ, யாரிடம் எல்லாம் பட்டியல் இல்லையோ, அந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த தகவலை தாசில்தார்கள், உங்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவித்து விடுங்கள்.

    இவ்வாறு அதில் அவர் பேசி உள்ளார்.

    கலெக்டரின் இந்த கண்டிப்பான பேச்சுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக அமைப்புகளும் கலெக்டரின் பேச்சை வரவேற்றுள்ளன. #Shilpaprabhakar #VAO
    விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. #ChennaiCorporation #Banner #Advertising
    சென்னை:

    விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள (கோட்டம் 1 முதல் 200 வரை) பகுதிகளில் தனிநபர்கள், கோவில் திருவிழா, பொது நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும், அரசியல் கட்சிகள் சார்பாகவும் விளம்பர பேனர் வைக்க சட்டவிதிகளின்படி முறையாக விண்ணப்பம் அளித்து பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும்.

    விதிகளுக்கு மாறாகவும், அனுமதி பெறாமலும் பேனர் வைத்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது ஓராண்டு ஜெயில் அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற்று 6 நாட்களுக்கு மட்டுமே பேனர் வைக்க வேண்டும். 6 நாட்களுக்கு பின்பு விளம்பர அமைப்பாளர்களே அவற்றை அகற்ற வேண்டும்.

    அனுமதி வழங்கப்படும் பேனர்களின் கீழ்பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட எண், அனுமதி நாள், அனுமதிக்கான காலஅவகாச நாள், அச்சகத்தின் பெயர் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட அளவு (நீளம், அகலம்) ஆகியவற்றை தவறாது குறிப்பிட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் அத்தகைய விளம்பர பேனர்களும், விளம்பர தட்டிகளும் விதிமீறலாக கருதப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், விளம்பர பேனர்கள் வைக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்

    ஒவ்வொரு விண்ணப்பதாரரும் படிவம் 1-ஐ பூர்த்திசெய்து அனுமதிகோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று, அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து அதற்கான தடையின்மை சான்று, பேனர் வைக்கும் இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு பேனருக்கும் அனுமதி கட்டணம் ரூ.200-க்கான வரைவோலை (டி.டி.) மற்றும் காப்பீட்டு தொகை ரூ.50-க்கான வரைவோலையை (டி.டி.) ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி என்ற பெயரில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    விளம்பர பேனர்கள் நடைபாதை ஓரமாக வைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் இருபுற சாலையின் நடுவில் பேனர் அமைக்கக்கூடாது. 10 அடிக்கும் குறைவாக நடைபாதை இருக்கும் சாலைகளின் 2 புறங்களும் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படமாட்டது. நடைபாதைகளின் குறுக்காகவோ அல்லது சாலையின் குறுக்காகவோ வைக்க கூடாது. நடைபாதை அல்லது சாலைக்கு இணையாக வைக்க வேண்டும்.

    கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வெட்டுகள், சிலைகள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் சாலை சந்திப்பு அல்லது சாலையின் ஓரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பேனர் வைக்க கூடாது.

    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறப்பட்டு வைக்கப்படும் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வைக்க வேண்டும்.

    அனுமதி இல்லாமல், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ChennaiCorporation #Banner #Advertising 
    சீன பட்டாசுகளை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    அந்தியூர்:

    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் அந்தியூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை புகையில்லா தீபாவளியாக கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. சீன பட்டாசுகளை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. தெரியாமல் யாரும் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னையை பொருத்தவரை நடமாடும் காற்று கண்காணிப்பு மையம் உள்ளது. இதன் மூலம் மாசு மற்றும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும், அரசு சார்பில் விபத்தில்லா தீபாவளிக்காக கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களுக்கு இது குறித்து தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    ×