search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weather update"

    • மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது.

    இதனால் வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருந்த போதிலும் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக இன்று முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
    • மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

    தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
    • தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்தே காணப்படுகிறது.

    தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் கனமழை, சில இடங்களில் லேசான மழை கடந்த ஒரு வார காலமாக பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு விடுமுறை அளிக்கும் வகையில், மழை பெய்து வருவதால் வழக்கத்தை விட தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்தே காணப்படுகிறது.

    இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 1) துவங்கி முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி போன்ற 17 இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

    ×