search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young entrepreneurs"

    • தமிழ்நாட்டில் 2023-24 ஆண்டு 8,475 சொகுசு கார்கள் விற்பனை.
    • கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட இது 46.2% அதிகம்.

    தமிழ்நாட்டில் ஆடி, லம்போர்கினி, பி.எம்.டபுள்யூ, ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களை முன்பதிவு செய்யும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தமிழ்நாட்டில் அதிகளவிலான சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    2019-2020 ஆம் ஆண்டில் 4,187 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், 2020-21ல் 2,816 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்றால் இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. பின்னர் 2021-22 ஆம் ஆண்டில் 3,954 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன.

    பின்னர் 2022-23 ஆம் ஆண்டில் 5797 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 2023-24 ஆண்டு 8,475 ஆக அதிகரித்துள்ளது.

    இது கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட 46.2% அதிகமாகும்.

    2023-24 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1,192 பி.எம்.டபுள்யூ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து 1,122 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் 217 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் 84 போர்ஷே கார்களும் 77 ஆடி கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் அதிகபட்சமாக சென்னையில் 1668 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 4 ரோல்ஸ் ராய்ஸ் காட்களும் அடங்கும்.

    இதற்கு அடுத்ததாக கோவையில் 510 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 110 கார்களும் திருநெல்வேலியில் 95 கார்களும் திருச்சியில் 65 கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கொரோனாவிற்கு பிறகு நிறைய இளம் தொழிலதிபர்கள் சொகுசு கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், சொகுசு கார்களை வாங்கும் 70% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • வட்டார தொழில் மையத்தை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் விஷ்ணு.
    • இந்த மையத்தின் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகள், குறைந்த செலவில் உலக அளவில் எடுத்துச் செல்லப்படும்.

    நெல்லை:

    தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் இளம் தொழில் முனைவோர்களுக்கும், சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தாரும் பயன்பெறும் வகையில் வட்டார புத்தொழில் மையம் இன்று தொடங்கப்பட்டது.

    முதல் கட்டமாக மதுரை, நெல்லை, ஈரோட்டில் இன்று தொடங்கப்பட்டது. இதனை காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மையத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் நாகஜோதி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் சபாநாயகர் பேசியதாவது:-

    தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக அமைக்கப்பட்டதுதான் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் நோக்கமாகும்.

    நெல்லையில் தொடங்கப்பட்டுள்ள மையத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழில் முனைவோர்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இந்த மையத்தின் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகள், குறைந்த செலவில் உலக அளவில் எடுத்துச் செல்லப்படும். இது தொழில் முதலீட்டாளர்களையும், தொழில் முனைவோர்களையும் இணைக்கும் சிறந்த திட்டமாகும்.

    நாட்டுக்கே வழிகாட்டியான திட்டமாகும். அனைவருக்கும் அனைத்தும் என்ற உயரிய சிந்தனைகளோடு ஒருங்கிணைந்த தொழில் முனைவு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இந்த வட்டார புத்தாக்க மையம் முக்கிய பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இம்மையத்தின் வளாகத்தில் காணிஇன மக்களால் தயாரிக்கப்படும் இயற்கை உணவு பொருட்கள், நாட்டு வெல்லம், பழமை வாய்ந்த அரிசி ரகங்கள், கம்பு, சோழம், கேப்பை, கேழ்வரகு, நாட்டு தைலம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பல்வேறு அரங்குகளில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

    நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோருடன் டெல்லியில் கலந்துரையாடல் நடத்தினார். டேராடூன், கவுகாத்தி மற்றும் ராய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளம் தொழில் அதிபர்கள் இதில் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இன்றைய பெரும் நிறுவனங்கள் அனைத்தும் சிறிய புள்ளியில் தொடங்கியவை தான். எனவே இந்தியர்கள் புதுமையை நோக்கி நடைபோடுவதை தொடர வேண்டும். இல்லாவிட்டால் நாம் தேங்கி விடுவோம்.

    ஒரு காலத்தில் ‘ஸ்டார்ட் அப்’ என்றால் அது டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிற துறைகளிலும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை நாம் பார்க்க முடிகிறது.

    இன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய நகரங்களுடன் நின்று விடுவது இல்லை. மாறாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் கூட துடிப்பான ஸ்டார்ட் அப் மையங்களாக உருவாகி வருகின்றன. அந்தவகையில் உலகளாவிய ஸ்டார்ட் அப் சூழியலை பெற்று இந்தியா புகழ்பெற்று விளங்குகிறது.

    தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக இளையோர் சந்திக்கும் நிதி பற்றாக்குறை பிரச்சினையை அரசும் புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் அதிகமான இளைஞர்கள் இந்த துறையில் சாதிப்பதற்காக ரூ.10 ஆயிரம் கோடிக்கான நிதியை அரசு உருவாக்கி உள்ளது.

    இந்திய இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பை உருவாக்குகின்றனர். அதன் பலனை அவர்கள் பெறுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அரசிடம் விற்க முடியும். அத்துடன் அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகளையும் அரசு எளிமையாக்கி உள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்த 2,500 புதுப்பித்தல் ஆய்வகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகங்கள் இருப்பது போல, இந்த புதுப்பிக்கும் ஆய்வகங்களும் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

    நாங்கள் ஒரு மிகப்பெரிய விவசாய சவாலை உருவாக்கி உள்ளோம். இதில் பங்கேற்று நமது வேளாண் துறையை எப்படி மாற்றுவது? என்று சிந்திக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

    ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கு அத்தியாவசியமான சட்ட உதவிகளை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் குழு ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இப்படி நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 
    ×