என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Youth arreste"
- கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
- 2 வாலிபர்கள் விஜயகுமாரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
கோவை:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று கோவைக்கு வந்த இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 பேர் விஜயகுமாைர அசைய முடியாதபடி மடக்கி பிடித்தனர். பின்னர் மற்றொரு வாலிபர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், ரூ.980 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து விஜயகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச் சென்ற காந்திபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அஜித், பாலாஜி ஆகியோரை தேடி வருகிறார்கள்.
- கள்ளக்குறிச்சி அருகே குண்டர் தடுப்புச்சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- கள்ளக்குறிச்சி மாவ–ட்டம் எறையூர்கி ராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் (வயது23). இவர் அதே ஊரைச் சேர்ந்த ரெய்மண்ட் என்பவரை முன்விரோ–தத்தின் காரணமாக கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் காவல்துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர்கி ராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் (வயது23). இவர் அதே ஊரைச் சேர்ந்த ரெய்மண்ட் என்பவரை முன்விரோ–தத்தின் காரணமாக கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் காவல்துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து எறையூர் கிராமத்தில் பொது–அமைதிக்கு குந்த–கம் ஏற்படுத்தும் வகை–யில், அடிதடி சண்டை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச் செய––லில் ஈடுபட்டு பொதுமக்களைஅச்சத்தில் ஆழ்த்தியும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கி வந்தார். மேலும் இவர் வெளியே இருந்தால் வரும் காலங் களில்தொ டர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடு படக்கூடும் என்பதால், இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஜெய்சனை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்