search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A car on fire"

    • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
    • அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்

    ஜோலார்பேட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது 36). இவரது மனைவி சத்தியா (32). இவர்களுக்கு லித்திக்ஷா (6) என்ற மகளும், நிவின் (3) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கலைமணி கிருஷ்ணகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது காரில் நேற்று இரவு சென்றார். காரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டினார்.

    இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். காரில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தொரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போக்குவரத்து நெரிசல்
    • தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்

    வேலூர்:

    வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் மாதய்யன். இவர் தனது காரை வேலூரில் உள்ள மெக்கானிக் கடைக்கு பழுது பார்க்க ஓட்டி சென்றார்.

    அப்போது கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேலூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென காரில் புகை வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மாதய்யன் காரில் இருந்து உடனே வெளியே இறங்கி ஓடி வந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பரவியதால், அந்தப் பகுதியில் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது.

    இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள், தீப்பிடித்து எரிந்த கார் வெடுத்து விடுமோ? என பயந்து தூரமாகவே வாகனங்களை நிறுத்தி விட்டனர். சுமார் 45 நிமிடங்கள் கார் தீப்பற்றி எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சென்று, போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீயில் கருகி நாசமானது.

    வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், சத்துவாச்சாரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    45 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்ததால், சிலர் சர்வீஸ் சாலைகளில் இறங்கி எதிரும், புதிருமாக சென்றனர்.

    வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • உடனடியாக அவரை மீட்ட போலீசார் இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கார் தீப்பிடித்து எரிவதாக நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஒரு கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    அதில் இருந்து ஒருவர் தப்பி வெளியே வந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த ரிஷிகேஷ் (வயது 23) என்பது தெரியவந்தது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×