search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "a coconut tree"

    • கனமழை பெய்து கொண்டிருந்த போது மின் கம்பிகள் தென்னங்கீற்றில் உரசியது.
    • தென்மரத்தின் கிளையில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் மற்றும் கள்ளிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடிரென காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதில் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு தென்னை மரம் உள்ளது.

    அந்த மரத்தின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த போது மின் கம்பிகள் தென்னங்கீற்றில் உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தென்மரத்தின் கிளையில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    தற்போது மழை காலம் என்பதால் இதுபோன்று நிகழ்வால் ஏதேனும் ஆபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகளுக்கு இடை யில் செல்லும் மின் கம்பி களை முறையாக பராமரிப்பு செய்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×