search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A professor"

    • பேராசிரியரின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன அழுத்தை ஏற்படுத்தி என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • துடியலூர் போலீசார் பேராசிரியர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர்.

    இவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எச்.டி. முழு நேரமாக படித்து வருகிறேன். எனது கல்லூரியில் 50 வயது பேராசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் அடிக்கடி நான் உணவறை மற்றும் கழிவறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் போது பின் தொடர்ந்து வந்து தொடக்கூடாத இடங்களில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

    படிப்பு சம்பந்தமாக கருத்தரங்கு ஆகியவற்றிக்கு செல்லும் போது கூட நான் ஆண் என்று தெரிந்தும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனை மனவேதனை அடைந்த நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பேராசிரியரின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன அழுத்தை ஏற்படுத்தி என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது.எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.கல்லூரி மாணவரின் புகாரின் பேரில் துடியலூர் போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×